Apr 24, 2008

மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள்!

எழுதியவர் : நிர்வாகி on Wednesday, 23rd April 2008

அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் தங்களின் கொள்கைகைளைத் தாங்கிப் பிடிக்க இயலாத மேலை நாட்டு சக்திகளும், தாங்கள் பின்பற்றும் சமயத்தை விட சத்திய இஸ்லாம் வேகமாக வளர்ந்து வருவதைத் சகித்துக் கொள்ள இயலாதவர்களும் இஸ்லாத்தைப் பற்றி பொய்யான தகவல்களையும், அவதூறுகளையும் கூறி இஸ்லாத்தின் மீது சேற்றை வாரியிறைத்துக் கொண்டிருக்கின்றனர்.

முஸ்லிம்கள் ஏற்பாடு செய்யும் அறிவுப்பூர்வமான விவாத மன்றங்களில் கலந்துக் கொண்டு தங்களின் கொள்கைகளை நிலை நாட்ட சக்தியற்ற இவர்கள், சத்திய இஸ்லாத்தைப் பின்பற்றும் முஸ்லிம்களை தங்களின் அசத்தியக் கொள்கையின் பால் இழுக்க முயன்று படு தோழ்வியை தழுவிய இவர்கள், சத்திய இஸ்லாத்தின் தூய கொள்கைகளால் கவரப்பட்டு சத்திய மார்க்கமான இஸ்லாத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கும் தங்களின் கொள்கைச் சகோதர சகோதரிகளையாவது குறைந்தபட்சம் தடுத்து நிறுத்தலாமே என்ற குறுகிய மனப்பான்மையில் இஸ்லாத்தின் மீது பலவாறாக இட்டுக்கட்டி பொய்களையும் கற்பனைகளையும் அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றனர்.

இதற்காக இவர்கள் தங்களின் கைவசம் உள்ள உலகப் புகழ்பெற்ற மீடியாக்களையும், ஊடகங்களையும் பயன்படுத்துகின்றனர். வலையுலக ஊடகங்களைப் பயன்படுத்துவோர் இன்னும் ஒரு படி மேலே சென்று இஸ்லாத்தின் பெயரிலேயே போலி வலைதளங்களைத் துவக்கி வைத்துக்கொண்டு இஸ்லாத்தைப் பற்றி அறிய விரும்புபவர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றி மிக மோசமாக சித்தரிக்கின்றனர். தங்களின் கொள்கைகளின் மேன்மையை எடுத்துக் கூறி தங்களின் கொள்கையின் பால் அழைப்பதற்குப் பதிலாக சத்திய இஸ்லாத்தின் தூய கொள்கைகளினால் கவரப்பட்டு அதை நோக்கிச் செல்கின்ற தங்களின் சகோதரர்களை தடுத்து நிறுத்துவதற்காக இவர்கள் செய்கின்ற இத்தகைய கீழ்தரமான செயல்களின் மூலம் தாம் எவ்வளவு கீழ்த்தரமானவர்கள் என்பதையும் தாம் பின்பற்றும் கொள்கைகளும் எவ்வளவு கீழ்தரமானவை, மக்களிடம் செல்வாக்கு இழந்து வருகின்றது என்பதையும் அவர்களே நிருபிக்கின்றனர்.

இவ்வாறு இவர்கள் சத்திய இஸ்லாத்தின் மீது வாரியிரைத்துக் கொண்டிருக்கும் சேறுகளில் சிலவற்றைப் பார்ப்போம்!

- முஸ்லிம்கள் மக்காவில் உள்ள கருப்புக் கல்லை வணங்குகின்றனர்- முஸ்லிம்களின் கடவுள் அல்லா என்ற ‘சந்திரக் கடவுள்’ (Moon god) நவூது பில்லாஹ்- முஸ்லிம்கள் அனைவரும் பயங்கரவாதிகள், அவர்களுக்கு பயங்கரவாதமே போதிக்கப்படுகின்றது- இஸ்லாம் பெண்களைக் கொடுமைப்படுத்தி இழிவு படுத்துகிறது

இப்படி இவர்களுடைய பொய்களை, அவதூறுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஆனால் சத்திய வேட்கையினால் சத்தியத்தை தேடியலைந்து சத்திய இஸ்லாத்தை தங்களின் சத்திய மார்க்கமாக தேர்ந்தெடுப்பவர்களை இவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இவர்களுடைய பொய் பிரச்சாரங்கள் அனைத்தையும் தவிர்ந்தவர்களாக இஸ்லாத்தை நோக்கி திரும்புபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே செல்கிறதே தவிர குறையவில்லை. அல்ஹம்துலில்லாஹ்.

அமெரிக்காவில் ஒரு வருடத்திற்கு 20,000 (இருபது ஆயிரம்) பேர்களுக்கும் மேல் இஸ்லாத்தை தழுவுவதாக CNN தொலைக்காட்சி கூறுகிறது.

ஐநோப்பியக் கூட்டமைப்பு நாடுகளிலோ முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இஸ்லாம் அங்கு வளர்ந்து வருவதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றது. நபி (ஸல்) அவர்களைப் பற்றி கேலிச்சித்திரம் வரைந்த டென்மார்க் நாட்டில் இஸ்லாம் அதிவேகமாக வளர்ந்து வருவதாக அந்த நாட்டைச் சேர்ந்த அறிஞர் ஒருவர் கூறுகிறார். (பார்க்கவும் வீடியோ)

இத்தகைய அதிவேக வளர்ச்சியைக் கண்டு பொறுக்காத மேலை நாட்டுச் சக்திகளும், மிஷனரிகளும் பல்வேறு வகையான திட்டங்களைத் தீட்டி இஸ்லாத்தின் வளர்ச்சியை மட்டுப்படுத்த முனைகின்றனர். இவர்களின் இந்த கீழ்தரமான செயல்களில் சில: -

- குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்களைத் திரித்து இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை அவற்றிற்கு கொடுப்பது, அவற்றை தாங்களே உருவாக்கிய போலியான இஸ்லாமிய தளங்களிலே பதிப்பது!

- பொய்களையும் புரட்டுகளையும் இஸ்லாம் மீதுள்ள காழ்புணர்ச்சிகளையும் தங்கள் கைவசம் உள்ள மீடியாக்களின் மூலம் தொடர்ந்து கூறிக் கொண்டிருப்பது

மேலை நாட்டவர்களிலும் மற்ற சமயத்தவர்களிலும் இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொள்ள விரும்பும் நல்லுள்ளம் கொண்டவர்கள் பலர் மேற்கத்திய ஊடகங்களின் தொடச்சியான இத்தகையை பொய்களினால் இஸ்லாத்தைப் பற்றி தப்பான அபிப்ராயம் கொண்டவர்களாக இருக்கின்றனர். இதற்கு சான்றாக பின்வருபவற்றைக் கூறலாம்: -

1990 களில் இஸ்லாத்தைத் தழுவிய முன்னாள் கிறிஸ்தவ மதபோதகரும், இன்னாள் இஸ்லாமிய மார்க்க போதகருமான ஷெய்ஹு யூசுஃப் எஸ்டஸ் அவர்கள் நிகழ்ச்சி ஒன்றில் தாம் ஏன் முஸ்லிம் ஆனேன் என்று கூறுகையில்,

“முஸ்லிம்கள் அனைவரும் பயங்கரவாதிகள், அவர்கள் மக்காவிலுள்ள கருப்புக் கல்லை வணங்குகிறார்கள், அவர்களிடமிருந்து கிறிஸ்தவர்கள் விலகியே இருக்க வேண்டும்” என கிறிஸ்தவ மிஷனரிகளால் தங்களுக்கு பொய்ப் பிரச்சாரம் செய்யப்பட்டு வந்ததாகவும் அவற்றை தாம் நம்பி வந்ததாகக் கூறுகிறார். (பார்க்கவும் வீடியோ)

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்க பிரிவு கிறிஸ்தவ முன்னாள் மத போதகரான ஒருவர் தாம் எவ்வாறு சத்திய இஸ்லாத்தை தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டேன் என தொலை காட்சி ஒன்றுக்கு பேட்டியளிக்கையில்,

“இஸ்லாம் பயங்கரவாதத்தைப் போதிக்கும் ஒரு மதம், அதைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் தீவிரவாதிகள்” என மேற்கத்திய ஊடகங்களினாலும், மிஷனரிகளாலும் தாம் மூளைச்சலவைச் செய்யப்பட்டு அதையே தாம் உண்மை என நம்பி வந்ததாகவும் கூறினார். (பார்க்கவும் வீடியோ)

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த முன்னாள் கிறிஸ்தவப் பெண்மணி Melinda Baig என்பவர் தாம் ஏன் இஸ்லாத்தைத் தேர்ந்தெடுத்தேன் என்று கூறுகையில்,
“இஸ்லாத்தைப் பற்றிய நிறைய தவறான கருத்துக்கள் (misconceptions) மேலை நாடுகளில் உள்ளவர்களிடம் இருப்பதாகவும் அவற்றை மேற்கத்திய ஊடகங்கள் திட்டமிட்டு பரப்பி வருவதாகவும், அதனால் மேலை நாடுகளில் உள்ளவர்கள் எளிதாக அவற்றை உண்மை என நம்பிவிடுவதாகவும், அந்த வகையில் தாமும் இஸ்லாத்தை ஆய்வு செய்வதற்கு முன்னர் அவற்றையெல்லாம் உண்மை என நம்பி வந்ததாகக் கூறினார். மேலும் இவர் கூறுகையில் சத்தியத்தை தேடி அலைந்த போது இஸ்லாத்தைப் பற்றிப் படித்த போது தான் மேற்கத்தியவாதிகளால் இஸ்லாத்தைப் பற்றிப் பரப்பப்படும் செய்திகள் அனைத்தும் தவறானவை என தாம் அறிந்து சத்திய இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாகக் கூறுகிறார். (பார்க்கவும் வீடியோ)

எனவே எனதருமை இஸ்லாமிய சகோதரார்களே அந்நிய சக்திகளால் இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுத்து நிறுத்துவதற்காக திட்டமிட்டுப் பரப்பப்படும் இந்த மாதிரியான பொய்களை முஸ்லிம்களாகிய நாம் அறிவுப்பூர்வமான வகையில் எதிர் கொண்டு அவற்றிற்கு தக்க பதிலடி கொடுத்து மேற் கூறப்பட்ட சகோதர சகோதரிகளுக்கு ஏற்பட்ட இஸ்லாத்தைப் பற்றிய தவறான அபிப்பிராயத்தைப் போன்று இன்னும் அதே நிலையில் இருக்கின்ற சகோதர சகோதரிகளின் சிந்தனையை தட்டி எழுப்பி, அவர்களை சத்திய இஸ்லாத்தின் தூய போதனைகளைப் படிக்கச் செய்து, அவர்களின் சந்தேகங்களைப் போக்கி அவர்களை சத்திய இஸ்லாத்தின் பால் அழைப்பது முஸ்லிம்களாகிய நம் அனைவர் மீதும் தலையாய கடமையாகும்.

ஆகையால் நாம் அதற்குரிய ஆற்றல்களை அல்-குர்ஆன் மற்றும் சுன்னாவைப் படிப்பதன் மூலம் வளர்த்துக் கொண்டு இத்தகைய தஃவா (அழைப்புப்) பணியில் தீவிரமாக நம்மை இணைத்துக் கொள்ள வேண்டும்.
ஏனென்றால், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“உங்கள் மூலமாக ஒருவருக்கு ஹிதாயத் (நேர்வழி) கிடைப்பது சிவந்த ஒட்டகங்களை விடச் சிறந்தது” ஆதாரம்: திர்மிதி.

அறிஞர்கள் இந்த ஹதீஸுக்கு விளக்கமளிக்கையில் “சிவந்த ஒட்டகங்களை விடச் சிறந்தது” என்பதற்கு “இந்த உலகத்தில் உள்ள எல்லாவற்றையும் விடச் சிறந்தது” என்று கூறுகிறார்கள்.

அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் மற்றும் முஸ்லிம்கள் அனைவருக்கும் இத்தகைய நற்பேற்றினை அளித்திட அருள்பாலிப்பானாகவும்!.

தொடர்புடைய ஆக்கங்கள்:
சத்திய இஸ்லாத்தை நோக்கி படையெடுக்கும் டென்மார்க் மக்கள்! - (Tamil Text+English Video)
நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - ஷெய்ஹு யூசுஃப் எஸ்டஸ் (English Video)
நான் ஏன் முஸ்லீம் ஆனேன்? - ஜெர்மன் விஞ்ஞானி!- (Tamil Text+English Video)
சத்திய இஸ்லாத்தை நோக்கி அமெரிக்க சகோதரி Melinda Baig! - English Video
சத்திய இஸ்லாத்தை நோக்கி ஃபின்லாந்து நாட்டு பெண் விஞ்ஞானி! - Video

Apr 22, 2008

ஈமானை பலப்படுத்துவது எப்படி?

அல்லாஹ் தன்னுடைய திருமறையின் அத்தியாயம் 16, ஸூரத்துந் நஹ்ல் வசனம் 102 ல் கூறுகிறான்: -

(நபியே!) ‘ஈமான் கொண்டோரை உறுதிப்படுத்துவதற்காகவும், (இறைவனுக்கு முற்றிலும் வழிப்பட்டோராகிய) முஸ்லிம்களுக்கு நேர்வழி காட்டியாகவும் நன்மாராயமாகவும் உம்முடைய இறைவனிடமிருந்து உண்மையைக் கொண்டு ரூஹுல் குதுஸ் (என்னும் ஜிப்ரீல்) இதை இறக்கி வைத்தார்’ என்று (அவர்களிடம்) நீர் கூறுவீராக.

அல்லாஹ் தன்னுடைய திருமறையின் அத்தியாயம் 8, ஸூரத்துல் அன்ஃபால் வசனங்கள் 2-4 ல் கூறுகிறான்: -

8:2 உண்மையான முஃமின்கள் யார் என்றால், அல்லாஹ்(வின் திருநாமம் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கிவிடும்; அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய ஈமான் (பின்னும்) அதிகரிக்கும்; இன்னும் தன் இறைவன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள்.

8:3 அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள்; அவர்களுக்கு நாம் அளித்த (செல்வத்)திலிருந்து நன்கு செலவு செய்வார்கள்.

8:4 இத்தகையவர் தாம் உண்மையான முஃமின்கள் ஆவார்கள்; அவர்களுடைய இறைவனிடம் அவர்களுக்கு உயர் பதவிகளும், பாவ மன்னிப்பும் சங்கையான உணவும் உண்டு.

அல்லாஹ் தன்னுடைய திருமறையின் அத்தியாயம் 9, ஸூரத்துத் தவ்பா வசனங்கள் 2-4 ல் கூறுகிறான்: -

9:124 ஏதேனும் ஓர் அத்தியாயம் இறக்கப்பட்டால், ‘இது உங்களில் யாருடைய ஈமானை (நம்பிக்கையை) அதிகப்படுத்தி விட்டது?’ என்று கேட்பவர்களும் அவர்களில் இருக்கின்றனர்; யார் ஈமான் கொண்டிருக்கிறார்களோ அவர்களுடைய நம்பிக்கையை இது (மெய்யாகவே) அதிகப்படுத்திவிட்டது இன்னும் அவர்கள் (இது குறித்து) மகிழ்ச்சி அடைகிறார்கள்.

9:125 ஆனால், எவர்களுடைய நெஞ்சங்களில் நோய் இருக்கிறதோ, அவர்களுடைய (நெஞ்சங்களிலுள்ள) அசுத்தத்துடன் மேலும் அசுத்தத்தையே (அது) அவர்களுக்கு அதிகப்படுத்தி விட்டது; அவர்கள் காஃபிர்களாக இருக்கும் நிலையிலேயே மரிப்பார்கள்.

அல்லாஹ் தன்னுடைய திருமறையின் அத்தியாயம் 3, ஸூரத்துல் ஆல இம்ரான் வசனங்கள் 190-195 ல் கூறுகிறான்: -

3:190 நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன.

3:191 அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்; வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, ‘எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!’ (என்றும்)

3:192 ‘எங்கள் இறைவனே! நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய்; மேலும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமிலர்!’ (என்றும்;)

3:193 ‘எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்; ‘எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக; இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!’ (என்றும்;)

3:194 ‘எங்கள் இறைவனே! இன்னும் உன் தூதர்கள் மூலமாக எங்களுக்கு நீ வாக்களித்ததை எங்களுக்குத் தந்தருள்வாயாக! கியாம நாளில் எங்களை இழிவுபடுத்தாது இருப்பாயாக! நிச்சயமாக நீ வாக்குறுதிகளில் மாறுபவன் அல்ல (என்றும் பிரார்த்தித்துக் கொண்டிருப்பார்கள்).

3:195 ஆதலால், அவர்களுடைய இறைவன் அவர்களுடைய இப்பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான்; ‘உங்களில் ஆணோ, பெண்ணோ எவர் (நற்செயல் செய்தாலும்) அவர் செய்த செயலை நிச்சயமாக வீணாக்க மாட்டேன், (ஏனெனில் ஆணாகவோ, பெண்ணாகவோ இருப்பினும்) நீங்கள் ஒருவர் மற்றொருவரில் உள்ளவர் தாம்; எனவே யார் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறினார்களோ மேலும் வெளியேற்றப்பட்டார்களோ, மேலும் என் பாதையில் துன்பப்பட்டார்களோ, மேலும் போரிட்டார்களோ, மேலும் (போரில்) கொல்லப்பட்டார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் நிச்சயமாக அகற்றி விடுவேன்; இன்னும் அவர்களை எவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கின்றனவோ அந்தச் சுவனபதிகளில் நிச்சயமாக நான் புகுத்துவேன்’ (என்று கூறுவான்); இது அல்லாஹ்விடமிருந்து (அவர்களுக்குக்) கிட்டும் சன்மானமாகும்; இன்னும் அல்லாஹ்வாகிய அவனிடத்தில் அழகிய சன்மானங்கள் உண்டு.

சகோதர சகோதரிகளே!

யார் ஒருவர் அளவற்ற அருளாளனின் எண்ணிலடங்காத அத்தாட்சிகளைத் தேடி, அவற்றைப் பற்றி சிந்தித்து ஆராய்ந்து, தெளிவு பெற்று அவனின் நுண்ணறிவாற்றலைக் கண்டு வியந்தவராக இவைகள் அனைத்தையும் இறைவன் வீண் விளையாட்டுக்காக படைக்கவில்லை என்று உறுதியாக நம்புகிறாரோ அப்போது அந்த நம்பிக்கை நிச்சயமாக அவருடைய ஈமானையும் அதிகரிக்கும்.

யார் ஒருவர் நிற்கும் போதும், அமர்ந்திருக்கும் போதும், படுத்திருக்கும் போதும் அல்லாஹ்வை நினைவு கூர்ந்தவராக அவன் நமக்கு அளித்திருக்கும் அளவற்ற நிஃமத்துக்களை, அருள்களை பற்றி சிந்தித்து அவனுக்கு நன்றி செலுத்த முயல்கிறாரோ அப்போது அது அவருடைய ஈமானையும் நம்பிக்கையையும் அதிகரிக்கும்.

அடுத்ததாக ஒருவருடைய இதயத்தில் இறை நினைப்பை அதிகரித்து ஈமானையும் நம்பிக்கையையும் அதிகரிக்கச் செய்து நம்மை இறைவனுக்கு மிக நெருக்க மாக்கி வைக்கும் மிக மிக முக்கியமான செயல் என்ன வெனில்,
மிகுந்த சிரத்தையுடன் அகிலத்தார்களுக்கெல்லாம் அருளாளனாகிய அல்லாஹ் நமக்கு வழிகாட்டியாக அருளிய அல்-குர்ஆனை பொருளுணர்ந்து படித்து அது கூறும் நல்லுபதேசங்களைப் பின்பற்றி அது விலக்கும் செயல்களை விட்டும் விலகியிருத்தல் ஆகும்.

அல்லாஹ் தன்னுடைய திருமறையின் அத்தியாயம் 16, ஸூரத்துந் நஹ்ல் வசனம் 89 ல் கூறுகிறான்: -

16:89 மேலும், இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்குகிறதாகவும், நேர்வழி காட்டியதாகவும், ரஹ்மத்தாகவும், முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும் உம்மீது நாம் இறக்கி வைத்திருக்கிறோம்.

அல்லாஹ் தன்னுடைய திருமறையின் அத்தியாயம் 14, ஸூரத்து இப்ராஹீம் வசனங்கள் 1-2 ல் கூறுகிறான்: -

14:1 அலிஃப், லாம், றா. (நபியே! இது) வேதமாகும்; மனிதர்களை அவர்களுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு இருள்களிலிருந்து வெளியேற்றிப் பிரகாசத்தின் பால் நீர் கொண்டுவருவதற்காக இ(வ் வேதத்)தை நாமே உம்மீது இறக்கியிருக்கின்றோம்; புகழுக்குரியவனும், வல்லமை மிக்கோனுமாகிய (அல்லாஹ்வின்) பாதையில் (அவர்களை நீர் கொண்டுவருவீராக!).

14:2 அல்லாஹ் எத்தகையவன் என்றால் வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே சொந்தாமாகும்; இன்னும் (இதை) நிராகரிப்போருக்குக் கடினமான வேதனையினால் பெருங்கேடுதான்.
வெறுமனே சில குர்ஆன் ஆயத்துக்களை ஓதுவதாலோ அல்லது பொருளறியமல் சில துஆக்களைக் கேட்பதாலோ ஒருவருடைய தீமையான காரியங்கள் அவரைவிட்டும் அகலாது, மேலும் அவைகள் அவருடைய ஈமானை, நம்பிக்கையை அதிகரிக்கவோ செய்யாது.

ஆனால் யார் ஒருவர் உண்மையிலேயே தன்னுடைய விருப்பு வெறுப்புகளை அல்லாஹ்வுக்காகவே என்று ஆக்கிக் கொண்டவராக அவர் தன்னுடைய இறைவனின் சீரிய வழிகாட்டுதல்களை பின்பற்றுகிறாரோ அவருக்கு இறைவனின் வழிகாட்டுதல்களும் மன்னிப்பும் கிடைக்கும். மறுமையில் அவனுடைய பாவங்கள் மன்னிக்கப்படும்.

ஆனால் இது ஒருவர் உண்மையாகவே அதிக சிரத்தையுடன் முயற்சி செய்து எவ்வித தயக்கமும் இல்லாமல் தன்னை இறைவழியில் முழுமையாக அர்பனித்துக் கொண்டால் மட்டுமே மறுமையில் நற்பாக்கியத்தைப் பெற்றுத் தரும் நேர்வழியை அடைவதற்கு வழிவகுக்கும்.

ஒருவரை அவர் தொடர்ந்து தவறுகள் செய்வதிலிருந்தும் தடுக்கக் கூடிய சக்தி எதுவென்றால் அவர் எந்நேரமும் தக்வா (இறையச்சமுடன்) இருப்பதுவேயாகும். அதாவது தவிர்க்க முடியாத நாளில் நம்மைப் படைத்த இறைவன் முன்னே நிறுத்தப்படுவோம், அவனுடைய விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு நாம் இவ்வுலகில் தீய செயல்கள் புரிந்தால் தண்டணை கிடைக்கும் என்ற அச்சத்துடன் எப்போதும் நாம் வாழ முற்பட்டால் நிச்சயமாக அது நம்முடைய வாழ்க்கையை சீராக்கி, வாழ்நாள் முழுவதும் மறுமை வாழ்வுக்கு தேவையான நற்கருமங்களைச் செய்வதற்கு அது நம்மைத் தூண்டும்.

இந்த இறையச்சமே இறைவனுக்கு கோபத்தை ஏற்படுத்துகிற செயல்களை செய்வதிலிருந்தும் நம்மைத் தடுக்கும்.

எனவே சகோதர சகோதரிகளே,- நம்முடைய மனதைச் சுத்தப்படுத்தி அல்லாஹ்வை எப்போதும் நினைவில் இருத்திக் கொள்ள சிறந்த வழி என்ன வென்றால்,- நம்முடைய எண்ணங்களை சீராக்கி அல்லாஹ்வுக்கு விருப்பமான செயல்களை செய்யக் கூடிய பக்குவத்தை ஏற்படுத்துவது எது வென்றால்,- நம்முடைய ஈமானை, நம்பிக்கையை அதிகரிக்கச் செய்ய சிறந்த வழி என்னவென்றால்,

நிச்சயமாக அது மனிதர்களின் இம்மை மறுமை வாழ்க்கையை வெற்றி பெறச் செய்வதற்காக மனிதர்களைப் படைத்த இறைவன் அருளிய அருள் மறையாம் திருக்குர்ஆனை பொருளுணர்ந்து படித்து அதன் படி வாழ முயற்சிப்பதே ஆகும்.

யார் ஒருவர் உண்மையிலேயே தன்னுடைய விருப்பு வெறுப்புக்களை அல்லாஹ்வுக்கென்றே அமைத்துக்கொண்டு, அவருடைய சொல் செயல்கள் அனைத்தையும் அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் அவனுடைய அருள்மறையின் ஏவல் விலக்கல்களுக்கேற்ப அமைத்துக் கொண்டு வாழ்வாரானால் நிச்சயமாக அவருடையஈமானும் நம்பிக்கையும் அதிகரிக்கும். அல்லாஹ்வின் அளப்பற்ற மன்னிப்பும் அவன் வாக்களித்த சுவர்க்கமும் அதன் மூலம் கிடைக்கும்.

தொடர்புடைய ஆக்கங்கள்:
சமூக முன்னேற்றத்திற்கு தேவையானது எது? - Audio/Video
அமல்கள் ஏற்றுக் கொள்ளப்பட…
இறையச்சத்தை அதிகப்படுத்துவது எவ்வாறு?
தவ்ஹீதும் அதன் வகைகளும்
இஸ்லாம் என்றால் என்ன? ஈமான் என்றால் என்ன? இவற்றிக்கிடையே உள்ள வேறுபாடு என்ன?

Apr 21, 2008

அல்-குர்ஆனை மனனம் செய்த அபூர்வ சகோதரர்கள்! - Video

நமது அண்டை வீட்டில் வசித்து வருபவர் சூடான் நாட்டைச் சேர்ந்த சகோதரர் பல்லாஹ் என்பவர். இவருடைய மூன்று மகன்களில் இருவர் ஏற்கனவே அல்-குர்ஆன் முழுவதையும் மனனம் செய்து விட்டனர். மூன்றாமவர் அல்-குர்ஆனில் நான்கில் மூன்று பகுதிகளை மனனம் செய்துவிட்டார், மீதமுள்ள பகுதிகளை மனனம் செய்து வருவதாகக் கூறுகிறார்.

நமது சகோதர, சகோதரிகள் தங்களின் குழந்தைகளுக்கு இது போல் ஆர்வமூட்டி தங்கள் குழந்தைகளையும் அல்-குர்ஆனை மனனம் செய்யும் நற்பேற்றினை பெற்றிட வல்ல இறைவன் அருள்பாலிப்பானாகவும்!

Link : Video

Apr 19, 2008

ஏகத்துவக் கலிமாவின் நிபந்தனைகள் - புதுப் புலர்வுடன்!

அரபி மூலம்: சுலைமான் அல்-முதைரி; தமிழாக்கம்: அபூ அரீஜ்
லாயிலாக இல்லல்லாஹ் என்றால், உண்மையாகவே வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் இல்லை என்பதாகும்.
“யார் (உண்மையாகவே) வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று கூறி, அல்லாஹ் அல்லாதவர்கள் வணங்கப்படுவதை நிராகரிக்கிறாரோ அவரது செல்வமும் அவருடைய உயிரும் பாதுகாக்கப்பட வேண்டியதாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

“அது, நிச்சயமாக அல்லாஹ்வே மெய்யானவன். அவனைத் தவிர அவர்கள் அழைப்பது பொய்யானதாகும்” (அல்-குர்ஆன் 31:30)

இத்திருகலிமாவிற்கு மார்க்க அறிஞர்கள் ஏழு முதன்மையான நிபந்தனைகளைக் குறிப்பிடுகின்றார்கள். அவற்றை அறிந்து பின்பற்றி வாழ்வது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.

மாறாக அவற்றை மனனம் செய்துக் கொண்டு கடைப்பிடிக்காமலிருப்பதல்ல. இந்நிபந்தனைகள் அனைத்தும் அல்-குர்ஆனையும் அல்-ஹதீஸையும் அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்டதாகும். உதாரணமாக தொழுகைக்கு நிபந்தனைகள் பல இருப்பதைப் போன்றதாகும். இங்கே குறிப்பிடப்படுகின்ற நிபந்தனைகள் அனைத்தும் கடைப்பிடிக்கப்படுகின்ற போது தான் “லாயிலாஹ இல்லல்லாஹ்வை” மொழிந்தவனுக்கு பயனளிக்கும் என்பதை அறிந்து கொள்வது அவசியமாகும். இங்கே ஒவ்வொரு நிபந்தனைக்கும் இரு உப நிபந்தனைகள் தரப்படுகின்றன. இந்த உப நிபந்தனைகள் தான் இங்கே கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியதாகும்.

உப நிபந்தனைகள்: -

a) ஒவ்வொரு நிபந்தனைக்கும் பேணப்பட வேண்டிய அடிப்படை அம்சம் (பூரண விசுவாசியாகும் நிலை)
b) குறிப்பிட்ட அந்நிபந்தனையை முறிக்கும் காரியங்கள் (அதாவது அவனை இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றிவிடும்)

முதன்மையான ஏழு நிபந்தனைகள்: -

1) அறிவு: -

அதாவது, வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ் ஒருவனே என்றும் அவனல்லாதவைகளை வணங்குவது தவறானது, அவைகளால் யாருக்கும் உதவி, தீமை செய்ய முடியாது என்பதை எவ்வித மறுப்புமின்றி ஏற்றுக் கொள்வதாகும்.

“ஆகவே (நபியே) நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வணக்கத்திற்குரிய வேறு) நாயன் இல்லை என்பதை நீர் அறிந்துக் கொள்வீராக” (அல்-குர்ஆன் 47:19)

இந்த வசனத்தின் மூலம் அறிவைத் தொடர்ந்து தான் அமல்கள் இடம் பெற வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

“உண்மையாகவே வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை என்பதை அற்ந்த நிலையில் எவர் மரணிக்கிறாரோ அவர் சுவனம் நுழைவார்” என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இந்த ஹதீஸ் மூலமாக அறிவார்ந்த செயல்பாடு தான் ஒருவனை சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரம் இந்த அறிவை
அடிப்படையாக வைத்து செயலாற்ற வேண்டும். இல்லையென்றால் நாளை மறுமையில் நமக்கெதிராக அமல்கள் கொண்டு வரப்படும்.

1a) இந்த நிபந்தனையில் பேணப்பட வேண்டிய அம்சம்: -

இஸ்லாத்தின் அடிப்படை அம்சங்கள், கடமையான விஷயங்கள், அறியாமை காரணமாக செய்வதால் நிராகரிப்பை ஏற்படுத்தக் கூடிய தடுக்கப்பட்ட விஷயங்கள் என்பவற்றை அறிந்த நிலையில், உண்மையாகவே வணக்கத்திற்குச் சொந்தக் காரண் அல்லாஹ் மட்டும் தான் என்பதையும், அவனன்றி வணங்கப் படுபவைகள் அனைத்தும் நிராகரிக்கப்படி வேண்டியவைகள் என்பதையும் அறிந்திருத்தல் வேண்டும்.

1b) இந்த நிபந்தனையை முறிக்கும் காரியங்கள்: -

வணக்கத்திற்குரியவன் உண்மையாகவே அல்லாஹ் தான் என்பதை அறியாமலிருத்தல், அல்லாஹ் அல்லாதவைகளையும் வணங்கலாம் அவைகள் இணைவைப்பை ஏற்படுத்தாது என்பதை என்று நினைத்தல், அல்லது இஸ்லாத்தின் அடிப்படை அம்சங்கள், வாஜிபுகள், இஸ்லாத்தை விட்டும் வெளிறே்றக் கூடிய தடுக்பட்ட விஷயங்களை அறியாமலிருத்தல் போன்றனவாகும்.

உதாரணம்: அவ்லியாக்களிடம் பிரார்த்திக்கலாம் என்று நினைப்பது. (இதனைச் செய்தால் இஸ்லாத்திலிருந்து வெளியேறி விடுவான்)

2) மன உறுதி: -

அதாவது, எவ்விதமான சந்தேகமுமின்றி உறுதியுடன் நம்ப வேண்டும். இவ்வடிப்படையில் கடுகளவேனும் சந்தேகப்படக் கூடாது.

“(உண்மையான) விசுவாசிகள் யாரென்றால், அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் விசுவாசங்கொண்டு, பின்னர் எவ்வித சந்தேகமும் கொள்ளாதிருந்தவர்கள்” (அல்-குர்ஆன் 49:15)

இவ்வசனத்தில் அவர்களுடைய மன உறுதியானது, அவர்களின் உண்மைத் தன்மையைப் பறை சாற்றுகின்றது. இதில் சந்தேகம் கொள்வது நயவஞ்சகமாகும்.

“உண்மையாகவே வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வென்றும், நான் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறுகின்றேன். எந்தவொரு அடியான் இவ்விரு விடயங்களிலும் சந்தேகமற்றவனாக அல்லாஹ்வைச் சந்திக்கின்றானோ அவன் சுவர்க்கம் நுழைவான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸில் ஒருவன், சுவனம் நுழைவதற்கு, ஷஹாதா கலிமாவைப் பொறுத்தவரை மன உறுதி எனும் நிபந்தனை மிகவும் கண்டிப்பான ஒரு விஷயமாகக் கூறப்பட்டுள்ளது. ஏனென்றால் இந்த அடிப்படையில் சந்தேகம் கொள்வது நிராகரிப்பாகும்.

2a) இந்த நிபந்தனையில் பேணப்பட வேண்டிய அம்சம்: -

உண்மையாகவே வணக்கத்திற்குச் சொந்தக்காரன் அல்லாஹ் மட்டும் தான் என்பதையும், அவனன்றி வணங்கப்படுபவைகள் இணைவைப்பாகும் என்பதனை சந்தேகத்திற்கு இடமின்றி மன உறுதியுடன் நம்புவதாகும். அத்துடன் இஸ்லாத்தின் அடிப்படை அம்சங்கள், கடமையான விஷயங்கள் மன உறுதி இல்லாமையின் காரணமாக நிராகரிப்பை ஏற்படுத்தக் கூடிய தடுக்கப்பட்ட விஷயங்கள் போன்றவற்றை அறிந்திருத்தல் வேண்டும்.

2b) இந்த நிபந்தனையை முறிக்கும் காரியங்கள்: -

மேலே குறிப்பிட்ட விஷயங்களில் சந்தேகம் ஏற்பட்டால் அல்லது அல்லாஹ் அல்லாதவைகளும் வணங்கப்படத் தகுதியானவைகள் தான் என்றோ அல்லது அச்செயல் இணைவைப்பாகாது என்றோ கருதினால் இந்த நிலை அவனை இஸ்லாத்தை விட்டே வெளியேற்றிவிடும்.

3) ஏற்றுக் கொள்ளல்: -

அதாவது இந்த சாட்சியத்தை மறுப்பின்றி ஏற்றுக் கொள்ளவேண்டும். அவற்றில் எதுவொன்றையும் நிராகரிப்பதோ மறுப்பதோ கூடாது.
“அல்லாஹ்வையும், எங்கள் பால் இறக்கப்பட்ட (இவ் வேதத்)தையும் நாங்கள் விசுவாசிக்கிறோம் என (விசுவாசங்கொண்டோரே) நீங்களும் கூறுங்கள்” (அல்-குர்ஆன் 2:136)

மேலும் “அல்லாஹ்வைத் தவிர (உண்மையாகவே) வணக்கத்திற்குரிய நாயன் வேறு யாருமில்லை என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் நிச்சயமாக அவர்கள் பெருமையடிப்பவர்களாக இருந்தனர். நாங்கள் பைத்தியக்காரரான ஒரு கவிஞருக்காக எங்களுடைய வணக்கத்திற்குரியவர்(களான தெய்வங்)களை நிச்சயமாக விடுகின்றவர்களாக?என்றும் அவர்கள் கூறுபவர்களாக இருந்தனர்” (அல்-குர்ஆன் 31:35-36)

இந்த வசனம் பெருமையின் காரணமாக ஏக தெய்வக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாமல் அல்லாஹ்வின் சாபத்திற்கு ஆற்பட்டார்கள். எனவே ஏற்றுக் கொள்ளுதல் என்பது இங்கு ஒரு முக்கிய நிபந்தனையாக இடம் பெறுகிறது.

3a) இந்த நிபந்தனையில் பேணப்பட வேண்டிய அம்சம்: -

இத்திருக்கலிமா உள்ளடக்கியிருக்கின்ற விஷயங்களையும், இஸ்லாத்தின் ஏவல் விலக்கல்களையும் மனதார ஏற்றுக்கொள்வதாகும்.

3b) இந்த நிபந்தனையை முறிக்கும் காரியங்கள்: -

இத்திருக்கலிமா பொதிந்துள்ள விஷயங்களில் ஒன்றை அது மார்க்கத்திலிலுள்ள விஷயம’ என்பது தெரிந்திருந்தும் அதனை அவன் நிராகரித்தால் அவன் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிவிடுகிறான்.

உதாரணம்: - இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒருவன் கண்டிப்பாக எல்லா வணக்க வழிபாடுகளையும் அல்லாஹ் ஒருவனுக்கு மடடும் தான் செலுத்த வேண்டும். அதே நேரம் பரவாயில்லை அவ்லியாக்களிடமும் பிரார்த்திப்போம் என்று சொன்னால், அவன் இன்னும் ஏக தெய்வக் கொள்கையை சரியாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தெளிவாகின்றது. எனவே குறிப்பிட்ட அந்த இணைவைப்பானது அவனை இஸ்லாத்தை விட்டும் வெளிறே்றி விடுகின்றது.

4) கட்டுப்படுதல் (கீழ்படுதல்): -

அதாவது, அல்லாஹ்வைத் தனது வணக்கத்திற்குரிய நாயனாகவும், முஹம்மது (ஸல்) அவர்களை அவனது நபியாகவும் தூதராகவும் ஏற்று இக்கலிமாவின் கடமைக்குக் கட்டுப்படவேண்டும்.

“இன்னும் உங்கள் இரட்சகன் பால் (தவ்பாச் செய்து) நீங்கள் திரும்பிவிடுங்கள். அவனுக்கு (முற்றிலும்) நீங்கள் கீழ்படிந்தும் விடுங்கள்” (அல்-குர்ஆன் 39:54)
செயல்களற்ற நம்பிக்கை மட்டும் எந்த பிரயோசனமும் அளிக்காது.

உதாரணமாக: அபூதாலிப் அண்ணலார் நபி என்பதில் உறுதியாக இருந்தார். அவரை உண்மைப் படுத்தவும் செய்தார்.

அதுமட்டுமல்ல அண்ணலாருக்கு உதவி ஒத்தாசையாகவும் இருந்தார். ஆனால் அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு கீழ்படியாத போது அல்லாஹ்வின் நேசத்தைப் பெறாமல் இணைவைப்பாளர்களில் ஒருவரானார் என்பதை நாம் வரலாற்றில் காணமுடிகின்றது.

‘எவர் - அவர் நன்மை செய்கிறவராயிருக்கும் நிலையில் (தனது காரியத்தை முழுமையாக ஒப்படைத்து) அல்லாஹ்வின் பால் தன் முகத்தைத் திருப்புகிறாரோ, அவர் நிச்சயமாக மிகமிக பலமானதொரு கயிற்றைப் பற்றிப் பிடித்துக்கொண்டார்’ (அல்-குர்ஆன் 31:22)

மேற்கண்ட வசனத்தின் விளக்கம் : -

‘எவர் நன்மை செய்கிறவராயிருக்கும் நிலையில்’ என்றால் அண்ணலாரின் வழிமுறையைப் பின்பற்றி வாழுதல் என்பதாகும்.

‘அல்லாஹ்வின் பால் தன் முகத்தைத் திருப்புகிறாரோ’ என்பது, அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, அவனுக்குக் கீழ்படிந்து, எல்லா அமல்களிலும் மனத்தூய்மையைக் கைப்பிடித்து இணைவைக்காமலும் இருத்தலுமாகும்.
‘நிச்சயமாக மிகமிக பலமானதொரு கயிற்றைப் பற்றிப்பிடித்துக் கொண்டார்’ என்றால், ஏகத்துவக் கலிமாவான கயிற்றைப் பற்றிப் பிடித்துக்கொண்டு தண்டையிலிருந்து தன்னைக் காத்துக் கொண்டார் என்பதாகும்.

இந்த வசனத்தில் ‘அல்லாஹ்வின் பால் தன் முகத்தைத் திருப்புகிறாரோ: என்ற பகுதி அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு அவனுக்குக் கீழ்படிதலைக் குறித்து நிற்கின்றது.

4a)இந்த நிபந்தனையில் பேணப்பட வேண்டிய அடிப்படை அம்சம்: -

எந்த விஷயங்களை விடுவதால் ஒருவனை இஸ்லாத்திலிருந்து வெளியேற்றுமோ அவைகளில் கவணமாக இருந்து அல்லாஹ்வின் ஏவல் விலக்கல்களுக்கு கீழ்படிதலாகும்.

4b) இந்த நிபந்தனையை முறிக்கும் காரியங்கள்: -

அ) எதாவது ஒரு கடமையை முழுமையாக விடுதல்ஆ) குறிப்பாக முழுமையாக விடுதல்இ) ஏகத்துவம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஒன்றை விடுதல் அல்லதுஇ) ஏகத்துவக் கொள்கையை நிலை நிறுத்தும் விஷயங்களில் ஒன்றை விடுதல் மூலம் ஒருவனை நிராகரிப்பாளனாக்கும் செயல்களைச் செய்தல்.

உதாரணம்: - முஸ்லிம்களை நேசிக்காமலிருத்தலும், இஷைவைப்பாளர்களை விட்டும் ஒதுங்கியிருக்காமலித்தலும் இதில் அடங்கும்.

5) உண்மை: -

அதாவது உண்மையாகவே அல்லாஹ்வை பயந்த நிலையில் இந்தக் கலிமாவிற்கு கட்டுப்பட்டு இஸ்லாத்தைப் பின்பற்றுவதாகும்.
‘விசுவாசங்கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்துக் கொள்ளுங்கள்! (சொல்லாலும், செயலாலும்) உண்மையாளர்களுடன் ஆகிவிடுங்கள்’ (அல்-குர்ஆன் 9:119)

இந்த வசனம் உண்மை எனும் நிபந்தனையின் முக்கியத்துவத்தைக் குறிக்கிறது. இந்த நிபந்தனை நீங்கும் போது அவ்விடத்தை பொய்யும் நயவஞ்சகமும் இடம் பிடிப்பதை நாம் அறிந்துக் கொள்ள முடியும். அதே போன்று இந்த நிபந்தனை நீங்கும் போது அதற்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கமும் கைநழுவிப் போய்விடும்.

‘எவர் (உண்மையாகவே) வணக்கத்திற்குத் தகுதியானவன் வேறு யாருமில்லை என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதத் என்றும் சாட்சி கூறுகிறாரோ அவருக்கு அல்லாஹ் நரகத்தை ஹராமாக்கி விடுகிறான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்! ஆதாரம் : புகாரி, முஸ்லிம்.
5a) இந்த நிபந்தனையில் பேணப்பட வேண்டிய அடிப்படை அம்சம்: -
இத்திருக்கலிமா உள்ளடக்கியவற்றை உண்மையாகவே ஈமான் கொள்ள வேண்டும். அதில் எல்லளவும் சந்தேகத்திற்கு இடமளிக்கக் கூடாது.

5b) இந்த நிபந்தனையை முறிக்கும் காரியங்கள்: -

அ) அந்த திருக்கலிமாவை ஆரம்பமாகவே பொய்யாக மொழிதல்ஆ) இத்திருக்கலிமா உள்ளடக்கியுள்ளவற்றை பின்னர் பொய்படுத்தல்

6) மனத்தூய்மை: -

அனைத்து வகையான வணக்க வழிபாடுகளையும் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே எனும் மனத்தூய்மையுடன் நிறைவேற்ற வேண்டும். எந்த வகையான உலக இலாபங்களும் எதிர்பார்ப்புகளும் இருக்கக் கூடாது.

‘ தூய மார்க்கம் (வழிபாடு) அல்லாஹ்வுக்கே உரித்தானது என்பதை அறிந்துக் கொள்வீராக’ (அல்-குர்ஆன் 39:3)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

தனது உள்ளத்திலிருந்து மனத்தூய்மையோடு எவன் ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்று கூறுகிறானோ அவன் தான் (மறுமையில்) எனது பரிந்துரைக்கு மிகவும் தகுதியானவன்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி.

இந்த ஹதீயில் இஹ்லாஸ் எனும் மனத்தூய்மை ஷஹாதா கலிமாவில் பிரதானமாகும் என்பது புலனாகின்றது. அத்துடன் மனத்தூய்மை அற்றுப் போகின்றபோது அண்ணலாரின் பரிந்துரை இல்லாமல் போவதை உணர்ந்துக் கொள்ள முடிகின்றது. இதே போன்று இன்னும் எத்தனையோ ஹதீஸ்களில் எவர் லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறுகின்றாரோ அவர் மீது நரகம் ஹராமாகின்றது போன்ற ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளது. இது வாஜிபான ஏகத்துவக் கொள்கை பூரணமாகின்ற போது தான் சாத்தியமாகும் என்பதனை அறிந்துக் கொள்ள வேண்டும்.

இந்தக் கொள்கை நிறைவேற சில நிபந்தனைகள் அவசியம்: -

- வாஜிபான கடமைகளை நிறைவேற்றுதல்- இரண்டு வகையான (சிறிய, பெரிய) இணைவைப்புகளிலிருந்து நீங்கியிருத்தல்- பெரும்பாவங்களை விட்டும் நீங்கியிருத்தல் மனத்தூய்மைக்கு எதிரானது இணைவைப்பு, முகஸ்துதி போன்றவைகளாகும்.

ஒரு முஸ்லிம் மனத்தூய்மையற்றவனாக தனது அமல்களைச் செய்கின்ற போது அந்த அமல்கள் அனைத்தும்பயனற்றுப் போவது மட்டுமல்லாமல் தண்டைனையையும் பெற்றுத் தரும் என்பதில் சந்தேகமில்லை.

மேலும் (இம்மையில்) அவர்கள் செயலால் செய்து கொண்டிருந்தவற்றின் பால் நாம் முன்னோக்கி, பின்னர் (அவர்கள் உலகில் விசுவாசம் கொள்ளாததால்) பரத்தப்பட்ட புழுதியாக(பயனற்றதாக) அவைகளை நாம் ஆக்கிவிடுவோம். (அல்-குர்ஆன் 25:23)

6a) இந்த நிபந்தனையில் பேணப்பட வேண்டிய அம்சம்: -

இறை நம்பிக்கையில் அல்லது செயல்பாடுகளில் அல்லது சொற் பிரயோகங்களில் ஷிர்க் கலந்துவிடாமலிருக்க வேண்டும்.

6b) இந்த நிபந்தனைணை முறிக்கும் காரியங்கள்: -

எவனது இறை நம்பிக்கையிலோ அல்லது செயல்பாடுகளிலோ அல்லது சொற்பிரயோகங்களிலோ ஷிர்க்கின் ஒரு பகுதியாவது கலந்து விட்டால் குறிப்பிட்ட அவன் இஸ்லாத்தை விட்டும்வெளியேறிவிட்டான்..

உதாரணம்: -

அப்துல் காதிர் ஜீலானிக்கு அறுத்துப் பலியிடலாம் என்று எண்ணினாலோ அல்லது அறுத்துப் பலியிட்டாலோ அல்லது அந்த விஷயம் கூடும் என்று கூறினாலோ அவன் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிவிடுகிறான்.

7) நேசம்: -

அதாவது இத்திருக்கலிமா மூலம் ஏற்படக் கூடிய கொள்கை கோட்பாடுகளை நேசித்தல், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் (அதே போன்று அவனுக்கு வழிபட்டு நடக்கும் நல்லடியார்களையும் அத்து மீறாமல்) நேசித்தலாகும். இறுதியாக அல்லாஹ்வின் ஏவல்களை எடுத்து விலக்கல்களைத் தவிர்ந்து நடப்பதாகும். இது அல்லாஹ்வின் மீது அன்புக் கொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றி அவனுடைய தண்டனையைப் பயந்து அவனது நற்கூலிக்கு ஆதரவு வைத்ததாகவும் வேண்டும். ஒரு மனிதன் அல்லாஹ்வை நேசிக்கிறான் என்பதற்கான அடையாளம் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் முழுமையாகப் பின்பற்றுவது தான்.

‘(நபியே) நீர் கூறுவீராக, நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள்; (அவ்வாறு நீங்கள் செய்தால்) உங்களை அல்லாஹ் நேசிப்பான். உங்கள் பாவங்களையும் உங்களுக்காக அவன் மன்னித்து விடுவான். (அல்-குர்ஆன் 3:31)

மனிதர்களில் அல்லாஹ்வையன்றி அவனுக்கு இணையாளர்களை (சமமானவர்களாக) ஆக்கிக் கொண்டு அல்லாஹ்வை நேசிப்பது போன்று அவர்களை நேசிப்பவர்களும் இருக்கின்றனர்… அவர்கள் நரக நெருப்பிலிருந்து வெளியேறவே மாட்டார்கள். (அல்-குர்ஆன் 2:165-167)

உண்மையான நேசத்தில் அல்லாஹ்வுக்கு அவனது படைப்பினங்களை நிகராக்குவது ஒருவனை இஸ்லாத்திலிருந்து வெளியேற்றி அவனை நிரந்தர நரகவாதியாக மாற்றும் என்பது தெளிவாகின்றது.

எனவே இங்கு குறிப்பிடப்படும் நேசம் என்பது ஒரு மிகப் பெரிய வணக்கமாகும். அல்லாஹ்வோடுள்ள நேசமானது அதில் அதில் எவ்வித கலங்கமுமு; அற்ற நிலையில் இருக்க வேண்டும்.

அப்போது தான் உண்மையான விசுவாசியாக அது அவனை மாற்றும்.எனவே தான் இது ஷஹாதா கலிமாவின் நிபந்தனைகளில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது.

7a) இந்த நிபந்தனையில் பேணப்பட வேண்டிய அடிப்படை அம்சங்கள்: -

அ) அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நேசித்தல்ஆ) இத்திருக்கலிமா உள்ளடக்கிய விஷயங்களை நேசித்தல்இ) முஃமின்களை நேசித்தலும் இணைவைத்தலையும் இணைவைப்பாளர்களையும் வெறுத்தல்

7b) இந்த நிபந்தனையை முறிக்கும் காரியங்கள்: -

அ) அல்லாஹ்வுக்கு நிகராக ஒன்றை நேசித்தல் (உதாரணம் : நாகூர் ஆண்டவரை அல்லாஹ்வை நேசிப்பது போன்று நேசித்தல். இது நிராகரிப்பாகும்.ஆ) இத்திருக்கலிமாவின் உள்ளடக்கங்களில் ஒன்றை வெறுத்தல்இ) இணைவைப்பiயும், இணைவைப்பாளர்களையும் வெறுக்காமலிருத்தல்.

Apr 17, 2008

சமூக முன்னேற்றத்திற்கு தேவையானது எது?

உரை: அபூ அரீஜ்

முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு மிக மிக அவசியமானது இரண்டு! அந்த இரண்டில் எந்த ஒன்றில் குறை ஏற்பட்டாலும் சமூகம் பின்னடைவை ஏற்படும். சமூகம் என்பது தனி நபர்களின் கூட்டமைப்பாகும். எனவே ஒவ்வொரு தனிப்பட்ட முஸ்லிமும் அவசியம் கேட்டு பின்பற்றி சமூகத்தின் மேம்பாட்டிற்கு உதவ வேண்டும்.

Link : Audio/Video

Apr 16, 2008

இறைவனுக்கு உள்ள இலக்கணம்!

எழுதியவர்: அபூ அரீஜ்

அளவற்றோனின் திருநாமம் போற்றி.

மதங்கள் என்பது இறைநம்பிக்கையை மையமாக வைத்தே தோற்றம் பெற்றுள்ளது. இன்று உலகில் கடவுள் நம்பிக்கையற்ற ஒரு மதத்தையேனும் காணமுடியவில்லை. ஒவ்வொரு மதத்தினரும் தத்தமது வேதநூல்களாகக் கருதும் அந்த மத வழிகாட்டிகளை வைத்தே கடவுள் நம்பிக்கையையும், கடவுளுக்கு இருக்க வேண்டிய பண்புகளையும் குறிப்பிட்ட அந்த மதத்தோடு பின்னிப் பினைந்துள்ளனர். இஸ்லாம் தவிர்ந்த இதர அனைத்து மதங்களும் பல தெய்வ வழிபாட்டையும், ஏக இறைவனுக்கு இணைகற்பிக்கும் மன்னிக்க முடியா குற்றத்தை தூண்டுவனவாகவே உள்ளன. நாம் இப்படிக் கூறும் போது சிலருக்குக் கோபம் வரலாம். இது தவிர்க்க முடியாத ஒன்றாகும். இருந்தாலும் நம்மை சத்தியத்தை விட்டும் தடுத்துக் கொண்டிருக்கும் அந்தக் கோபத்தை சிறிது நேரம் ஓரங்கட்டிவிட்டு நாம் கூறும் கருத்துக்களை சற்று சிந்தித்துப் பாருங்கள் உண்மையை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.

எல்லா மதங்களும் கடவுளின் தன்மையைப் பற்றி விளக்கினாலும் போதிய கடவுளின் இலக்கணங்கள், பண்புகள் பற்றி சரியாகக் குறிப்பிடாமை தான் சில மதங்களில் கோடிக்கணக்கான கடவுள் நம்பிக்கையும், வழிபாட்டு முறையும் தன்னகத்தே ஏற்படுத்தியுள்ளன. போதாமைக்கு நாளுக்கு நாள் இன்னும் பல கடவுளர்கள் புதிது புதிதாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தோன்றிக் கொண்டிருக்கின்றனர். அத்தோடு தாங்கள் கடவுளின் அவதாரம் என்று கூறிக் கொண்டு அப்பாவி மக்களை ஏமாற்றிக் கொண்டு வயிறு வளர்ப்பதையும் நாம் பார்க்கத் தான் செய்கின்றோம். அதே நேரம் தாம் கடவுளின் அவதாரம் என்று கூறி ஒரு அப்பாவி முஸ்லிமைக் கூட ஏமாற்ற முடிவதில்லை. ஏனென்றால் உடனே கடவுள் எப்படி மனிதரானார்? கடவுள் மனிதனாக மாறினால் கடவுளின் இடத்தில் தற்போது யார் இருக்கிறார்? போன்ற கேள்வியைக் கேட்டு போலித் தனத்தை தோலுரித்துக் காட்டிவிடுவர்.
இஸ்லாத்தின் இறுதி வேத நூலான அல்-குர்ஆனின் 112 வது அத்தியாயம் ஏனைய மதங்கள் விட்டுள்ள இடைவெளியைப் பூர்த்தி செய்து இறைவனுக்கு இருக்கவேண்டிய இலக்கணத்தை கச்சிதமாகக் கூறி பல தெய்வ வணக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கின்றது. இந்த அத்தியாயத்தின் சிறப்பம்சம் என்ன வென்றால், எல்லோருக்கும் புரியும் விதத்தில் அதன் வசனங்கள் உள்ளன. வெறும் நான்கே வசனங்கள். மற்றும் மிக எளிய நடையிலமைந்த சின்னச் சின்ன வசனங்கள் நம்மை வியக்க வைக்கின்றன!.

அது மட்டுமல்ல இப்படி இரத்தினச் சுருக்கமாக ஒருக்காலும் மனிதனால் இறைவனுக்குரிய இலக்கணத்தைக் கூற முடியாது என்பது அல்-குர்ஆன் இறைவாக்கு என்பதற்கான ஒரு சான்றாகும். எனவேதான் அல்-குர்ஆன் மனிதனைச் சிந்திக்கத் தூண்டுகிறது. நிச்சயமாக சிந்திப்போருக்கு நிறைய சான்றுகளை பரிசாக வைத்திருக்கின்றது அல்-குர்ஆன்.

அல்-குர்ஆனின் 112 வது அத்தியாயம்: -

1. (நபியே!) நீர் கூறுவீராக: அவன் – "அல்லாஹ்" ஒருவனே!

2. அல்லாஹ் (யாவற்றை விட்டும்) தேவையற்றவன் (யாவும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன).

3. அவன் (எவரையும்) பெறவில்லை, (எவராலும்) பெறப்படவுமில்லை.

4. மேலும், அவனுக்கு நிகராக எவருமில்லை.

இந்த வசனங்களை ஒரு முறை ஆழ்ந்து கவணிப்போமானால் இந்த தன்மைகளுக்கு உட்பட்டவன் தான் உண்மையான கடவுளாக, வணங்குவதற்குத் தகுதியுள்ளவனாக இருக்க முடியும் என்பதனையும், உண்மையான கடவுளாகிய அல்லாஹ் தவிர்ந்த வணங்கப்படும் அனைத்தும் மதனிதக் கற்பனையில் உதித்த போலிக் கடவுள்கள் என்பதனையும் இலகுவில் புரிந்து கொள்ள முடியும்.

இதோ சத்தியத்தைத் தேடி ஒரு சலனமற்ற பயணம் தொடங்குகிறது: -

மேற் கூறப்பட்டுள்ள அத்தியாயத்திலுள்ள வசனங்களை ஒவ்வொன்றாக அனுகுவோம்.

01. "(நபியே!) நீர் கூறுவீராக, அவன் – 'அல்லாஹ்' ஒருவனே!"

ஒரு விஷயத்தை நாம் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது எல்லா மத்திலும் பல கடவுளர்கள் இருப்பது போல் 'அல்லாஹ்' என்பது முஸ்லிம்களின் கடவுள் எனக் கருதுவது தவறாகும். யாரை முஸ்லிம்களாகிய நாம் 'அல்லாஹ்' என்று வணங்கி வழிபடுகின்றோம் என்றால், இந்த உலகத்தைப் படைத்து பரிபாலிக்கின்ற வல்ல நாயனான அந்த ஏக சத்தனைத்தான். தவிர 'அல்லாஹ்' முஸ்லிம்களுக்கு மட்டுமுள்ள தனிக் கடவுள் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது.

இந்த வசனமானது கடவுள் என்பவன் நிச்சயமாக ஒருவனாகத் தான் இருக்க முடியும் என்பதனை அடித்துக் கூறுகின்றது. ஒன்றுக்கு மேற்பட்ட கடவுளர்கள் இருந்தால் என்ன நடக்கும் என்பதனை யூகித்துக் கொள்ளலாம். வேற்று மதப் புராணங்களில் கடவுளர்களுக்கிடையில் இடம் பெற்ற சமர்கள், சச்சரவுகள், இழிவான செயல்கள் என்பன எண்ணிலடங்காதவை. ஒரு சாதாரன சிறிய நாட்டைக் கூட ஆழுவதற்கு ஒரே ஒரு ஜனாதிபதி மட்டும் தான் இருக்க வேண்டும் என உலகமே ஏற்றுக் கொண்டுள்ள போது அகிலம் அனைத்தையும் அடக்கியாள ஒன்றுக்கு மேற்பட்ட ஆட்சியாளர் இருக்கவே முடியாது என்பதனைத்தான் இந்த வசனம் விளக்குகிறது.

02. "அல்லாஹ் (யாவற்றை விட்டும்) தேவையற்றவன் (யாவும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன)".

இறைவனானவன் அனைத்துத் தேவைகளை விட்டும் அப்பாற் பட்டவன். நம்மைப் போல தேவைகளுடையவன் இறைவனாகவே இருக்க முடியாது.
மனிதனுக்கு எது எதுவெல்லாம் தேவைப்படுகிறதோ அவையனைத்தும் குறைகளே. எனவே இதே குறைகளை இறைவனுக்கும் கற்பிப்பது நாம் இறைவனை குறைத்து மதிப்பிடுகின்றோம் என்பதாக அமைந்துவிடும். அதுமட்டுமல்ல நமது தேவைகளை முறையிடுவதற்காக இறைவனிடம் கையேந்துகின்றோம். அவனே தேவையுள்ளவன் எனும் போது அவனிடம் நாம் எப்படி உதவி கோர முடியும்! பிச்சைக் காரனிடம் பிச்சை கேற்பது போன்றாகி விடும்.

இந்த இழுக்கை நீக்கும் விதமாகத்தான் அல்லாஹ் தனது திருமறையில் எவ்விதத் தேவையுமற்றவன் என்பது மூலம் தனக்கு மனிதர்கள் ஏற்படுத்திய பலவீனத்தை அப்புறப்படுத்துகிறான்.

இறைவனானவன் எள்ளும் பிசகாமல் தன் படைப்பினங்கள் அனைத்தையும் கண்காணித்துக் கொண்டிருப்பவன். அவனுக்கு நம்மைப்போன்றே ஆசா பாசங்கள் இருந்தால் அவற்றை நிறைவு செய்யும் நேரத்தில் உலகத்தாரின் கோரிக்கைகளை யாரிடம் முறையிடுவது? எல்லாம் வல்ல நாயனை எவ்விதக் குறைகளும் இன்றி வணங்கி வழிபடுவோமாக!

03. "அவன் (எவரையும்) பெறவில்லை, (எவராலும்) பெறப்படவுமில்லை".

இறைவனானவன் தனித்தவன் எனும் பொழுது அவனுக்கு பெற்றோர்களோ அல்லது குழந்தைகளோ இருக்க முடியாது. மனிதன் நினைப்பது போன்று இறைவனுக்கும் குடும்பம், கோத்திரம் இருக்குமானால் இறைவன் சமூகம் என்று ஒரு சமூகம் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் அப்படியொரு சமூகத்தை யாரும் பார்த்ததும் கிடையாது. அதற்கு சாத்தியமும் இல்லை. அல்லது அப்படி ஆரம்பத்தில் இருந்தார்கள் என்று கூறினால் அவர்களை ஒரு குறிப்பிட்ட காலத்தோடு மறைத்தது யார்? அல்லது குறிப்பிட்டதோர் காலத்துடன் அனைவரும் இறந்து விட்டார்கள் என்றால், இறைவனுக்கு இறப்பு தகுமா? என்ற கேள்வி நம் சிந்தனையைக் குடைகின்றது. இன்று சிலைகளாக சித்தரிக்கப்பட்டுள்ள கடவுளர்கள் அனைத்தும் கற்பனையில் தோன்றியவைகள் என்பதை நடுநிலையோடு சிந்தித்தால் அவர்களே தெரிந்து கொள்வார்கள்.

கிறிஸ்தவர்கள் கூறுவது போன்று இயேசு இறைமகன் கிடையாது. ஏனன்றால் இறைவன் வாரிசு எனும் தேவையை விட்டும் அப்பாற்பட்டவன். போதாதற்கு பைபிளில் கூட இயேசு தன்னைப்பற்றிய வாக்கு மூலத்தில் தான் இறைவனின் மகன் என்று ஒரு இடத்தில் கூட கூறவில்லை. அப்படி தனது சீடர்களில் ஒருவர் கூட நம்பவுமில்லை. மாறாக பவுலின் கற்பனையில் உதித்த காவியமாகத் தான் இந்த நம்பிக்கையைக் கூற முடியும். அதற்கு பைபிளே சான்றாகவும் உள்ளது.

அடுத்தது கடவுள் மனிதனாக வரவேண்டிய அவசியம் தான் என்ன? முதலாவது கடவுள் மனித வடிவில் வந்து தான் இவ்வுலக மாந்தருக்கு வழிகாட்ட வேண்டும் என்பது கிடையாது. கடவுள் கடவுளாக இருந்து கொண்டே தனது பனிகளைச் செய்வதுதான் கடவுளுக்குரிய பண்பாகும். உதாரணமாக, ஒரு நாட்டு ஜனாதிபதி தனது சட்டங்களை அமுல்படுத்த சாதாரன தொழிலாளியாக மாறித்தான் தொழிலாளிகள் சட்டங்களைக் கூற வேண்டும் என நினைப்பது தவறாகும்! அவ்வாறு யாராவது நினைத்தால் பைத்தியகாரத்தனம் என்போன். கடவுள் விஷயத்தில் மட்டும் ஏன் இந்த நீதமான பார்வை இல்லாமற் போனது?! கவணத்திற் கொள்க!அடுத்தது கடவுள் மனிதனாக இவ்வுலகிற்கு வந்தால் கடவுளுக்கு இருக்கும் எத்தனையோ பிரத்தியேகத் தன்மைகளை இழக்க வேண்டியேற்படும்.
இது போன்ற இன்னோரன்ன தத்துவங்களை உள்ளடக்கியதாக இந்த வசம் இடம் பெற்றுள்ளது.

04. "மேலும், அவனுக்கு நிகராக எவருமில்லை".

இந்த வசனமானது ஒன்றே இறைவனது தனித்தன்மையை விளக்கப் போதுமானது. இறைவனுக் ஒப்பாக எதுவுமில்லை என்று அல்-குர்ஆன் மட்டுமல்ல எல்லா மத நூல்களும் கூறிக் கொண்டிருக்கும் போதே எத்தனையோ கடவுளர்களை உண்டாக்கியவன் மனிதன். இறைவனுக்கு யாராவது அல்லது எதாவதொன்று ஒப்பாக இருக்குமானால் தன்னிகரற்ற இறைவன் என்று சொல்ல முடியாது போய்விடும். இவ்வையகத்தில் இறைவனைக் கண்டவன் எவருமில்லை. இப்படியிருக்க யாரும் காணாத, காணமுடியாதவனுக்கு யாரை ஒப்பாக்கி சிலைகளை வடித்தார்கள்? புரியாத புதிர்!!

எனவே சுருக்கமாகக் கூறினால், இந்த நான்கு பன்புகளும் இறைவனின் இலக்கணங்களாகும். உண்மையான இறைவனைத் தேடுபவர்களுக்கு (touch stone) ஒரு உறை கல்லாக எடுத்துக் கொள்ளலாம்.

படைத்தவனை விட்டுவிட்டு நாமேன் படைப்பினங்களை வணங்க வேண்டும். இதோ நீங்கள் தேடும் சத்தியப் பாதையில் ஓர் நிகரற்ற தோழனாக இந்த நான்கு வசனங்களும் இருக்கட்டும்.

Apr 14, 2008

போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்!

எழுதியவர்: அபூ அரீஜ்

உலக சமூகங்களில் எண்ணிக்கை அடிப்படையில் இன்று முஸ்லிம் சமூகம் இரண்டாம் இடம் வகிக்கின்றது. இந்த ஒப்பற்ற வளர்ச்சி உலக ஆதிக்க வக்கிரப் புத்தி கொண்ட சமூகங்களுக்கு பெரும் தலையிடியாக மாறியுள்ளது.

உலக மதங்களில் வயதினடிப்படையில் மிகவும் இளைய மதமாகத்தான் இஸ்லாம் கணிக்கப்படுகின்றது. அதன் துரித வளர்ச்சி, கட்டுக்கோப்பு, தளர்வற்ற தன்மை, பிற மதத்தினர்களை இலகுவில் கவரும் திறண் போன்றவற்றை மேற்கத்திய நாடுகளும், கிறிஸ்தவ ஆதிக்க வர்க்கமும் சகித்துக் கொள்ள முடியாமல் திணறுவதை அவர்களது ஆக்கங்கள் அம்பலமாக்கிவிடுகின்றன!

‘அவர்கள் தங்கள் வாய்களினால் (ஊதி) அல்லாஹ்வின் பிரகாசத்தை அணைத்து விட நாடுகின்றனர். இந்நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன்னுடைய பிரகாசத்தை பூர்த்தியாக்கி வைப்பதைத் தவிர (வேறெதையும்) நாடவில்லை’. – அல்-குர்ஆன் (9:32).

சத்தியத்தின் வளர்ச்சியை, உண்மையின் உயர்ச்சியை யார் தான் தடுக்க முடியும். சத்தியச் சூரியன் உதித்து விட்டால் சட்டென்று விலகிவிடும் இருட்டு. சூரியனுக்கு கருப்புச் சாயம் பூச நினைக்கின்றது ஒரு வக்கிரச் சமூகம்! சத்திய இஸ்லாத்தின் சர்ரென்ற வளர்ச்சியை தாங்கிக் கொள்ள முடியாமல் சத்தியத்தை அசத்தியமாக்கும் முயற்சிகளில் பலர் களமிறங்கியிருக்கின்றனர்.

உலகத்தாருக்கு அருட்கொடையாக உதித்த எம் பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்களை கேலிச் சித்திரத்தின் மூலம் அவமதிக்க அண்மைக் காலமாக டென்மார்க் போன்ற நாடுகளில் உள்ளவர்களால் கடும் முயற்சி மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் முன்னர் இருந்ததை விட முஸ்லிம்களிடத்திலும், முஸ்லிமல்லாதோரிடத்திலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது அந்தஸ்தும், மதிப்பும் அதிகரித்து வருவதை அவர்களே உணரத் தொடங்கியுள்ளனர்.

தரமான பொருட்கள் சந்தைகளில் அதிகம் கொள்முதல் செய்யப்படுவது அதன் சிறப்பை உணர்த்துகின்றது. தரமற்ற பொருட்கள் மற்றும் போலி உற்பத்திகளை சந்தைப்படுத்தும் வியாபாரிகளுக்கு தரமான பொருட்கள் அதிகம் விலை போவதை தாங்கிக் கொள்ள முடிவதில்லை. அதனால் தரமான பொருட்கள் விற்போரைத் தாக்குவதையும், அந்த இடத்திலிருந்து அவர்களது வணிகத்தை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்குவதையும் நாம் நாளாந்தம் அங்காடி விற்பனைத் தளங்களில் காணும் காட்சிகளாக மாறிவிட்டது.

தரம் குறைந்த பொருட்களையும், போலி உற்பத்திகளையும் அதிகம் விற்கும் இடங்களில் தரமான பொருட்களை சந்தைப்படுத்துவோருக்கு இடம் கிடைப்பதில்லை. அதுமட்டுமல்லாமல் அந்த வியாபாரிகளைப் பற்றி அவதூறுகளைப் பரப்புவதையும், குறிப்பிட்ட அப்பொருட்களைப் பற்றி கீழ்தரமாகப் பேசுவதையும் அவர்கள் ஒருபோதும் நிறுத்துவதில்லை. இதனால் போலி வார்த்தைகளில் மயங்குபவர்கள் மயங்கிக் கொண்டே இருக்கின்றார்கள். அவர்கள் ஏமாற்றமடைந்து போவது ஒரு புறம் கவலையாகவும் மறு புறம் வேதனையாகவும் இருக்கின்றது.

போலிகள் கவணம்! போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்: -

இந்த நடவடிக்கையினால் தரமான பொருட்கள் தரம் குறைந்ததாக மாறி விடாது. அதனை விற்கும் வியாபாரிகள் மோசமானவர்களாக இருப்பார்கள் என்பதும் தவறு. எனவே தான் நடுநிலையாளர்கள் நம் சிந்தனையைக் கிளறும் சிறந்த வரிகளைக் கற்றுத் தந்து விட்டு கறை சேர்ந்துள்ளனர்.

கண்ணால் கண்டதும் பொய், காதால் கேட்டதும் பொய், தீரவிசாரித்து அறிந்ததே மெய்: -

இஸ்லாத்தை நோக்கி முஸ்லிமல்லாதோரின் படையெடுப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. எந்தப் பொருள் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகின்றதோ அப்பொருளைப் பற்றி அறிந்து கொள்ள மனிதர்கள் முற்படுவது இயற்கை. அதே போன்று தான் இன்று இஸ்லாமும், முஸ்லீம்களும் உலக மன்றத்தில் அதிகம் விமர்சனத்திற்கு உள்ளாகும் ஒன்றாக மாறியுள்ளது. இஸ்லாம் எக்கோணங்களிலெல்லாம் அவமதிக்கப்பட வேண்டுமோ அக்கோணங்களில் எல்லாம் அவமதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அனைத்துமே வீண் பழியும், பொய்க் குற்றச் சாட்டுக்களுமாகும். இவற்றை மக்களிடையே கொண்டு செல்வதில் மேற்கத்திய செய்தி ஊடகங்களும் சர்வதேச வலைப்பின்னல் தளங்களும் அதீத ஆர்வம் காட்டுகின்றன!

அரக்கர்களால் தூண்டப்பட்ட மக்கள் அல்-குர்ஆனைப் படிக்க ஆர்வம் காட்டத் துவங்கியுள்ளனர். பெருபேறு என்னவென்றால் அல்-குர்ஆன் அவர்களை ஈர்த்தது மட்டுமல்லாமல் இஸ்லாத்தில் நாளாந்தம் இனைந்து கொண்டிருக்கின்றனர். இது வெரும் போலிக் கூற்றன்று.

http://www.youtubeislam.com/ என்ற வெப்தளத்தைப் பாருங்கள் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். இஸ்லாத்தை நோக்கி படையெடுப்போரின் பட்டியலை அங்கே காணலாம். அவர்களது சொந்த வாக்கு மூலம் அங்கே ஒளி ஒலி வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த உண்மையை பொய்படுத்தும் நடவடிக்கையில் கிறிஸ்தவ அமைப்புக்கள் விடா முயற்சி எடுத்துள்ளனர். உலக பிரசித்தி வாய்ந்தவர்களின் பெயர்களை இட்டு இன்னார் முஸ்லிமாகி விட்டார், இன்னார் இஸ்லாத்தை ஏற்று விட்டார் என்றெல்லாம் போலியாக அவர்களே பொய் விளம்பரம் கொடுத்து வருகின்றனர். மைக்கல் ஜெக்ஸன் முஸ்லிமாகி விட்டார், சுனிதா வில்லியம்ஸ் முஸ்லிமாகி விட்டார் என்று சில கிறிஸ்தவர்கள் செய்தி வெளியிட்டு வருகின்றனர். இதன் மூலமாக புதிதாக இஸ்லாத்தை ஏற்போரின் உண்மைச் செய்திகளை உலகின் கண்களுக்கு பொய்ப்பிக்க முனைகின்றனர்.

இப்படிப்பட்டவர்களை நினைக்கும் போது பாவமாக உள்ளது. பொன்னான நேரத்தை வீணடித்து தீமைகளை விலை கொடுத்து வாங்குகின்றனர்.
சகோதரர்களே! சத்தியத்தை ஏற்று ஏக தெய்வ விசுவாசியாக வாழுங்கள். அல்லது சத்தியத்தை ஏற்போருக்கு வழிவிடுங்கள்.

Apr 13, 2008

நரக நெருப்பிலிருந்து பாதுகாக்கும் தான தர்மங்கள்!

எழுதியவர்: M. அன்வர்தீன்

பொருளாசை நிறைந்த இந்த உலகில் ஸதகா கொடுத்தல் என்பது மிக மிக அரிதாகி விட்டது. மனிதன் மரணிக்கும் போது எந்தப் பலனும் தராத செல்வத்தை அல்லாஹ்வின் பாதையில் செலவழிப்பதை விட சேர்த்து வைப்பதில் தான் அதிக அக்கரை எடுத்துக் கொள்கிறான்.

அல்லாஹ்விடத்தில் நன்மையை அடைய பல வழிகள் உள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்றை அல்லாஹ் தனது திருமறையில்,
“நீங்கள் விரும்பும் பொருள்களிலில் இருந்து செலவு செய்யாதவரை அல்லாஹ்விடத்தில் நன்மையை அடைய முடியாது” (அல்-குர்ஆன் 3:92)
என்று கூறுகிறான்.

இந்த உலகத்தில் மனிதன் விரும்பும் பிரதான பொருள் செல்வம். எனவே செல்வத்தை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாதவரை நன்மையை அடைய முடியாது என்பதை அறிந்துக் கொள்ள வேண்டும.

மறுமை நாளில் ஏதாவது ஒரு சிறிய நன்மை இருந்தால் போதுமே! அதைக் கொண்டு நரகத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளலாமே என ஆதங்கப்படுவான். முஹம்மது (ஸல்) அவர்கள்

“பேரித்தம் பழத்தின் ஒரு கீற்றைக் கொண்டாவது உன்னை நரக நெருப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்” என கூறியுள்ளார்கள். (புகாரி)

ஆகையால் பேரீத்தம் பழத்தின் ஒரு கீற்றைத் தான தர்மம் செய்வதைக் கொண்டும் நரக நெருப்பில் இருந்து காப்பாற்றிக் கொள்ளலாம் என தெரிய வருகிறது.நான் சம்பாதித்த சொத்து, என்னுடைய செல்வம் இதிலே என்னைத் தவிர யாருக்கும் உரிமையில்லை என்றெல்லாம் மனிதன் எண்ணிக் கொண்டு இருக்கிறான். ஆனால் அல்லாஹ் திருமறையில்,

“அவர்களுடைய செல்வத்தில் யாசிப்போருக்கும், வசதியற்றோருக்கும் (நாணம் காரணமாக கேட்காமலட இருப்போருக்கும்) உரிமையுண்டு” (அல்-குர்ஆன் 51:19)

என கூறுகிறான். ‘உரிமை உண்டு’ என்று கூறுவதன் மூலம் எவர் ஒருவர் தான தர்மம் செய்ய வில்லையோ அவர் அல்லாஹ்விடத்தில் குற்றவாளி என அறிய முடிகிறது.

நாம் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வதன் மூலம் நம்முடைய செல்வம் குறைந்து விடுகிறது என எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அல்லாஹ் திருமறையில்,

“நீங்கள் எந்தப் பொருளை செலவு செய்தாலும் அவன் அதற்குப் பிரதிபலன் அளிக்கிறான்” (அல்-குர்ஆன் 34:39)

என்று கூறுகிறான். நம்முடைய செல்வத்தை விசாலப்படுத்த வேண்டும் எனில், தான தர்மங்கள் செய்ய வேண்டும் என தெரிந்து கொள்ள முடிகிறது. இதை வலுப்படுத்தும் வகையில் மற்றொரு வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்,

“(கஷ்டத்திலிருப்போருக்கு) அல்லாஹ்வுக்கு அழகிய கடன் எவர் கொடுக்கிறாரோ, அதை அவருக்கு அவன் இரு மடங்காக்கி, பன் மடங்காகச் செய்வான்” என்று கூறுகிறான். (அல்-குர்ஆன் 2:245)

ஆதமுடைய மகன் ஒவ்வொருவரும் பாவியாக உள்ளான். தங்களுக்கு தாங்களே பாவம் செய்து கொண்ட அடியார்கள் என்று தான் அல்லாஹ் திருமறையில் கூறுகிறான். தங்களின் பாவங்களை அழிப்பதற்குப் பல வழிகள் உள்ளன. அவற்றில் சிறந்த ஒன்று ஸதகா என்னும் தான தர்மம்.

நபி (ஸல்) அவர்கள் “நீரானது நெருப்பை அணைப்பது போல் ஸதகா பாவங்களை அழித்து விடுகிறது” என்று கூறியுள்ளார்கள். (அஹமது, திர்மிதி).

தான தர்மங்கள் செய்யும் போது ஏதோ கடமைக்கு செய்யாமல், நம்முடைய தகுதிக்கு முடிந்த வரையில் செய்ய வேண்டும். பள்ளிவாசலிலோ அல்லது வெளி இடங்களிலோ உதவி கேட்பவர்களிடமே நம்முடைய பணப்பையை திறந்து 500, 200, 100, 50, 20, 10 போன்ற நோட்டுக்கள் இருந்தாலும் அவற்றை எல்லாம் விட்டு விட்டு எப்படியாவது தேடிப்பிடித்து ஒரு ரூபாய் அல்லது அதைவிடக் குறைவாக கொடுக்கக் கூடியவர்களாக உள்ளோம். அதற்காக எல்லாவற்றையும் கொடுக்க வேண்டும் என்று கூறவில்லை. நம்மால் முடிந்த அளவு கொடுக்கலாமே!.

மேலும் அல்லாஹ் தன்னுடைய திருமறையில்,

“குழந்தைகளும், செல்வங்களும் இந்த உலகத்தில் உங்களுக்கு சோதனைகளாகவே தரப்பட்டுள்ளது” (அல்-குர்ஆன் 8:28)

என்று சொல்கிறான். அந்த சோதனையில் இருந்து தப்பித்து வெற்றி பெற வேண்டுமெனில், அந்தச் செல்வத்தை அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்தால் மட்டுமே ஈடேற்றம் பெற முடியும்.

மேலும் தர்மம் செய்யும் போது, மற்றவர்களுக்குத் தெரியாமல் செய்தால் அது சிறந்ததாகக் கருதப்படுகிறது.

முஹம்மது (ஸல்) அவர்கள், “வேறு எந்த நிழழும் இல்லாத அந்த நாளில் ஏழு பேருக்கு அல்லாஹ் தன் நிழலிருந்து நிழல் தருகிறான். வலது கை தருவதை இடது கை அறியாது மறைத்து தருபவர் அந்த ஏழு பேரில் ஒருவர்” என்று கூறியுள்ளார்கள். (ஆதாரம் : புகாரி)

ஆனால் அதிகமான அறிஞர்களின் கருத்துப் படி, மற்ற செல்வந்தர்களை ஊக்கப்படுத்துவதற்காக, தான தர்மங்களை வெளிப்படையாகவும் செய்வது நன்மையான விஷயமாகவே கருதப்படுகிறது.

செல்வம் படைத்தவர்கள் தான தர்மங்கள் செய்து அல்லாஹ்விடத்தில் நன்மையை அடைந்து விடுகிறார்கள். வசதியில்லாதவர்கள் தான தர்மங்கள் எவ்வாறு செய்வது என்று நினைக்கத் தோன்றும். முஹம்மது (ஸல்) அவர்கள்,
“தொழுகைக்காக எடுத்து வைக்கக் கூடிய ஒவ்வொரு அடியும் ஸதகா, பாதையில் இருந்து தீங்கு தருபவற்றை அகற்றுவதும் ஸதகா, உன் சகோதரனைப் பார்த்துப் புன்முவல் பூப்பதும் ஸதகா!” என்று கூறியுள்ளார்கள்.

இங்கே சஹாபாக்களின் கொடுக்கும் தன்மையை கூறுவது சிறப்புக்குரியதாக இருக்கும் என எண்ணுகிறேன். அவர்களின் செயல்களிலிருந்து நாமும் பாடம் கற்றுக் கொள்ளலாமே!

அபூபக்கர் (ரலி) அவர்களை குறித்து முஹம்மது (ஸல்) அவர்கள் இவருடைய செல்வம் இஸ்லாத்திற்கு உதவியது போல் வேறு யாருடைய செல்வமும் எனக்கு உதவியதில்லை” என்று கூறினார்கள்.

தபூக் யுத்தத்தின் போது நடந்த ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட்டால் இங்கு பொருத்தமாக இருக்கும். தபூக் யுத்தத்திற்காக முஹம்மது (ஸல்) அவர்கள் பொருள் சேகரிக்க அறிவிப்பு கொடுக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் அபூபக்கர் (ரலி) அவர்கள் தன்னிடம் உள்ள பொருள்கள் அனைத்தையும் அல்லாஹ்வின் பாதையில் செலவழிப்பது வழக்கமான ஒன்று. உமர் (ரலி) அவர்கள் இந்த முறை தன்னிடம் உள்ள அனைத்தையும் கொடுத்து, அபூபக்கர் (ரலி) அவர்களை முந்திவிட வேண்டும் என்று நினைத்து முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் வந்து கொடுத்த போது, முஹம்மது (ஸல்) அவர்கள் உங்களுடைய குடும்பத்தினருக்காக ஏதாவது வைத்துள்ளீர்களா? என்று கேட்கிறார்கள். “சிலதை என்னுடைய குடும்பத்தினருக்காக மட்டும் வைத்துக் கொண்டு மற்ற அனைத்தையும் கொடுத்து விட்டேன்” என பதில் அளிக்கிறார்கள்.

அபூபக்கர் (ரலி) அவர்கள் முஹம்மது (ஸல்) அவர்களிடம் கொடுத்த போது உமர் (ரலி) அவர்களிடம் கேட்ட அதே கேள்வியை நபி (ஸல்) அவர்கள் கேட்கிறார்கள். “அல்லாஹ்வும் அவனது தூதரும் எனது குடும்பத்தினருக்குப் போதுமானவர்களாக உள்ளனர்” என்று அபூபக்கர் (ரலி) அவர்கள் கூறியபோது, உமர் (ரலி) அவர்கள் “அபூபக்கர் (ரலி) அவர்களை என்னால் ஒருபோதும் கொடுப்பதில் முந்திவிட முடியாது” என்றார்கள். சஹாபாக்களிடையே கொடுப்பதில் அந்த அளவுக்குப் போட்டி இருந்தது.

எனவே எனதருமை சகோதர சகோதரிகளே! நாம் அல்லாஹ்வின் பாதையில் அதிகமதிகம் செலவு செய்து அவன் அளிக்க விருக்கும் பரதிபலன்களைப் பெற்று நற்பாக்கியம் பெற்றவர்களாக நம்மை வல்ல அல்லாஹ் ஆக்கியருள வேண்டும் என பிரார்த்திப்போமாக!

Apr 10, 2008

நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - ஜெர்மன் விஞ்ஞானி!

தொகுப்பு: நிர்வாகி

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கருவியல் நிபுனர் ஒருவர் தாம் இஸ்லாத்தில் இணைந்ததற்கான காரணத்தை நிகழ்ச்சி ஒன்றில் கூறினார். அவர் ஆங்கிலத்தில் கூறியவற்றை சுருக்கமாக தமிழில் இங்கே தருகிறோம்.

முதலில் தாம் இஸ்லாத்தில் இணைவதற்கு இறைவன் வழிகாட்டியதாக கூறுகிறார். தான் இஸ்லாத்தில் இணைவதற்கு முன்னர் தன் வாழ்க்கையின் முதல் 35 ஆண்டுகளில் இறை மறுப்பாளராக இருந்ததாகவும், கடவுள் என்பது தேவையற்ற ஒன்று என்றும் கடவுள் இருப்பதற்கு எவ்வித சான்றுகளுமில்லை என்றும் நம்பிவந்ததாகக் கூறினார். தன் சிறு வயது முதல் அறிவியலில் ஆர்வமாக இருந்ததாக கூறும் இவர் அறிவியல் குறித்து ஓரளவு அறிவு ஞானம் பெற்ற பின்னர் இந்த பிரபஞ்சம் குறித்து ஆராய்ந்த அவர் அதில் எந்தவித பிளவுகளுமின்றி மிகத் துல்லியமாகப் இருப்பதைக்கண்டு, இந்த பிரபஞ்சம் தாமாகத் தோன்றியிருக்க முடியாது, இந்த பிரபஞ்சத்தைக் கடவுள் தான் படைத்திருக்க வேண்டும் என்றும் அதுவும் ஒரு கடவுள் தான் இருக்க முடியும் என்ற முடிவில் ஓரு கடவுள் நம்பிக்கையாளராக மாறியதாகக் கூறுகிறார்.

ஒரு கடவுளை ஏற்றுக் கொண்டிருந்தாலும் எந்தவொரு மதத்தையும் தான் பின்பற்ற வில்லையென்றும் எல்லா மதங்களும் தவறானவை என்றும் கருதி வந்ததாகக் கூறுகிறார். இதற்கு காரணமாக அவர் கூறுகையில்,

தன்னடைய வலது கையின் ‘மூன்று’ விரல்களைக் காட்டி அவைகளை கிறிஸ்தவர்கள் ‘ஒன்று’ என்று கூறுவதாகவும்,

யூதர்களைப் பொறுத்தவரையில், யூதர்கள் மட்டுமே கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்றும், யூதர்களல்லாத மற்றவர்கள் அனைவரும் கடவுளால் தேர்ந்தெடுக்கப்படாதவர்கள் என்றும் அவர்கள் கூறுவதாகவும்,

இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் அவர் அதைப்பற்றிய தவறான கருத்துக்களையும், எதிர்மறையான கருத்துக்களையே கொண்டிருந்ததாகக் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், தாம் மதங்களைப் பற்றிய அறியாமையில் நிலைத்திருக்க விரும்பவில்லை என்றும் அதனால் வேத நூல்களைப் படிக்கத்துவங்கியதாகவும் அதற்காக முதலில் கிறிஸ்தவ பைபிளைப் படித்தாகக் கூறுகிறார்.

பைபிளைப் படிக்கும் போது சில இடங்களில் அவைகள் கடவுளிடமிருந்து வந்ததைப் போன்ற உணர்வைத் தோற்றுவித்ததாகவும் பின்னர் மேலும் சில இடங்களில் வசனங்களைப் படிக்கும் போது அவை நிச்சயமாக கடவுளின் வார்த்தைகளாக இருக்க முடியாது, மனிதனால் உருவாக்கப்பட்டவை என்ற உணர்வைத் தோற்றுவித்ததாகவும் கூறுகிறார்.

மேலும் இவர் கூறுகையில், பைபிளைப் படிக்கும் போது முதலில் படித்த கருத்துக்களுக்கு முரணான கருத்துக்கள் அடுத்த சில பக்கங்களிலே வருவதாகக் கூறுகிறார். அதனால் அவர் நிச்சயமாக பைபிள் இறைத் தூதருக்குப் பல ஆண்டுகளுக்குப் பின்னால் மனிதர்களால் எழுதப்பட்டது என்று அறிந்ததாகக் கூறுகிறார்.

பின்னர் திருக்குர்ஆனின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஒன்றை வாங்கி அதை படிக்கத் துவங்கியிருக்கிறார். திருக் குர்ஆனைப் படிக்கும் போது இதுவும் பைபிளைப் போல ஒரு மனிதனால் எழுதப்பட்ட ஒரு நூல் என்ற நம்பிக்கையிலேயே தாம் படிக்கத் துவங்கியதாகக் கூறுகிறார்.

ஆனால் குர்ஆனைப் பொறுத்தவரையில் அதன் ஆசிரியர் முஹம்மது என்று திட்டவட்டமாக தாம் நம்பியதாக் கூறும் இவர் குர்ஆனில் மூன்றில் ஒரு பாகத்தை படித்து முடித்துவிட்ட நிலையில் தம் மனைவியிடம், “நிச்சயமாக முஹம்மது ஒரு சிறந்த அறிவாற்றல் உடையவராக இருந்திருக்க வேண்டும்! ஏனென்றால் இதுவரை படித்தவற்றில் முரண்பாடான கருத்து ஒன்று கூட குர்ஆனில் இல்லை, மேலும் இது குறைகள் அறவே இல்லாததாகவும், மிக எளிதாக பின்பற்றக் கூடியதாகவும் இருக்கிறது’ என்று கூறிய இவர் குர்ஆனை தொடர்ந்து படித்து வந்திருக்கிறார்.

குர்ஆனைத் தொடர்ந்து படித்து வந்த அவர் சமீபத்தில் இருபதாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மை ஒன்றை திருமறை வசனம் கூறுவதைக் கண்டதாகக் கூறுகிறார். உடனே அவர் நிச்சயமாக முஹம்மது இந்தக் குர்ஆனின் ஆசிரியராக இருக்க முடியாது என்றும் இது இறைவனிடமிருந்தே வந்திருக்க வேண்டும் என்றும் நம்பியதாக் கூறும் இவர் நிச்சயமாக முஹம்மது இறைவனால் மனிதகுலத்திற்கு குர்ஆனை வழங்க அனுப்பப்பட்ட தூதராகத் தான் இருக்க முடியும் என்று நம்பியதாகக் கூறுகிறார்.

ஒரு இறைவன் தான் இருக்க முடியும் என்று ஏற்கனவே உறுதி பூண்ட இவர் முஹம்மது (ஸல்) அவர்களை இறைவனின் தூதர் என ஏற்றுக் கொண்டதன் மூலம் தாம் ஒரு முஸ்லிம் ஆனதாக் கூறுகிறார்.

மேலும் இவர் கூறுகையில், பலர் தம்மிடம் ‘இஸ்லாத்தைப் பற்றி ஒன்றுமே அறியாதவராகவும் மேலும் இஸ்லாத்தைப் பற்றிய எதிர் மறையான கருத்துக்களையே கொண்டிருந்த நீங்கள் இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம் என்று அறிந்தவுடன் எப்படி செயல்பட்டீர்கள்? உடனே முஸ்லிம் ஆக விரும்புனீர்களா? அல்லது வேறு ஏதாவது எண்ணினீர்களா? என கேட்டனர். அதற்கு நான் கூறினேன், எனக்கு இஸ்லாத்தை விட்டால் வேறு மாற்று வழி இல்லை. ஏனென்றால், நான் பிறந்த போது குழந்தையாக இருந்தேன்!. அதனால் அப்போது நான் என் தாயிலிருந்து வேறுபட்டவனாக உணரமுடியவில்லை! கொஞ்சம் நாள் கழித்த பிறகு நான் உணர்ந்தேன் “நான் ஒரு சிறுவன் என்பதை!. ஆனால் அப்போது யாரும் என்னிடம் கேட்கவில்லை நீ சிறுவனாக விரும்பினாயா? என்று! ஏனென்றால் இது கடவுளின் விருப்பம், நமக்கு வேறு வழியில்லை என்பது தெரியும்' என கூறியதாக சொன்னார்.

மேலும் இவர் கூறுகையில், இறைவனின் அருளால் எனக்கு சிறந்த மனைவி, மக்கள் இருக்கிறார்கள்! ஆனால் இவைகள் அனைத்தையும் விட இறைவனின் மிக மிக சிறந்த அருளாக நான் கருதுவது அவன் எனக்கு காட்டிய இஸ்லாம் என்னும் நேர்வழியே ஆகும். நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் போது ‘என்னை இறை நம்பிக்கையாளனாகவே மரணிக்கச் செய், மீண்டும் நான் இறை நிராகரிப்பாளனாக மாற விடாதே!’ என பிரார்த்தனை செய்வதாக கூறுகிறார்.

மேலும் இவர் கூறுகையில், சிறிது நேரத்திற்கு முன்னால் என்னிடம் சிலர் 'குர்ஆனில் குறிப்பிடப்பட்டிருப்பதாகக் கூறப்படும் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மைகள் சில நேரங்களில் தவறாகக் கூட போகலாம்! எனவே நாம் மிக ஜாக்கிரதையாக அந்த அறிவியல் அத்தாட்சி உண்மையானது தானா என ஆராய்ச்சி செய்ய வேண்டும்' என கூறினர். இறைவன் தன்னுடைய திருமறையில் கூறுகிறான், “ஈமானில் உறுதியுடைய மக்களுக்கு நம் அத்தாட்சிகளை (அவர்கள் மனதில் பதியும்படி) நாம் நிச்சயமாகத் தெளிவாய் விவரித்துள்ளோம். (அல்-குர்ஆன் 2:118). எனவே என்னிடம் கேட்டவர்களுக்கு நான் கூறும் பதில் என்னவெனில், நீங்கள் ஈமானில் மிக்க உறுதியுடையவராகவும், அறிவியலில் தேர்ச்சி பெற்றவராகவும் இருந்தால், குர்ஆனில் அறிவியல் வசனம் ஒன்றைப் பார்க்கும் போது இது சரியா அல்லது தவறான என கவலைப் படத் தேவையில்லை! ஏனென்றால் அவை உடனே உங்களுக்கு உணர்த்தும் இவைகள் நிச்சயமாக அறிவியல் உண்மைகள் என்று! அதனால் இறைவனுக்கு நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு சஜ்தா செய்ய முற்படுவீர்கள்! ஏனென்றால் இது (குர்ஆன்) மிக உண்மையானது! இதில் எவ்வித தவறும் இல்லை! தவறான எந்தவித அறிவியலும் இதில் இல்லை! இந்த புத்தகம் இறைவனிடமிருந்து வந்தது. எனவே இறைவன் தவறு செய்ய மாட்டான்!

இவ்வாறு அந்த ஜெர்மன் நாட்டு அறிவியல் ஆராய்ச்சியாளர் கூறினார்.நன்றி : youtubeislam.com

வீடியோ இணைப்பு : நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - ஜெர்மன் விஞ்ஞானி (ஆங்கிலம்)

Apr 5, 2008

சரித்திர நாயகி உம்மு ஸுலைம் (ரலி)

உரை: அபூ அரீஜ்

உலக முஸ்லிம் பெண்களின் வரலாற்றில் இதுவரை யாரும் பெற்றிராத மஹரை பெற்ற உம்மு ஸுலைம் (ரலி) அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள்! ஒவ்வொரு இஸ்லாமிய பெண்ணும் அவசியம் கேட்டு அறிவுரை பெறவேண்டிய அற்புத சரிதம்!

Audio / Video Link: சரித்திர நாயகி உம்மு ஸுலைம் (ரலி)

Apr 2, 2008

நச்சுப் பாம்புக்குப் பெயர் தான் நல்லப் பாம்பு!

எழுதியவர்: அபூ அரீஜ்

சினிமாக்கள் உமிழ்ந்த எச்சங்கள் சில..

பொன்னான நேரம் மண்ணாய்ப் போகும் துயர்!
சமுதாய சீர்கேட்டிற்கு முதற் காரணியான காட்சி!
இஸ்லாமிய கலாச்சாரங்கள் சிதைவதற்கு வழிகோலுகின்றது!
மனிதனது உள்ளங்களிலே நயவஞ்சகத்தை உண்டாக்கும் விபரீதம்!
சில சமயங்களில் இன மோதல்களுக்குக் கூட வழிவகுக்கும் அபாயங்கள்!
சிறுவர்கள் மனங்களிலே சின்னச் சின்ன ஆசைகளை வளர்க்கின்றது!
வாலிப உள்ளங்களுக்கு வயாகரா ஏற்றி வேடிக்கைப் பார்க்கிறது இந்த சினிமா!

அந்திப்பட்டால் பாடங்களை மீட்டுவதில் ஆர்வம் காட்டிய மாணவர்கள்
இன்று டி.வி.க்களுக்கு முன்னால் காட்சி தரும் சோகங்கள்!
நல்ல விஷயங்களை கேட்பது, படிப்பது போன்ற நல்லறங்களை விட்டும் நம்மைத் தடுக்கிறது

குடிப்பழக்கம், புகைத்தல் போன்ற தீய பழக்க வழக்கங்களுக்கு
மிக விரைவில் மனிதனை அடிமையாக்கி வேடிக்கைப் பார்க்கின்றது இந்த சினிமாக்கள்!
நாகரிகம், ஸ்டைல் என்ற பெயரில் சினிமா நடிகர்களால் இவைகள் ஊக்குவிக்கப்படுகின்றது!
நாகரீக மோகம் கொண்ட இளைஞர்களுக்கு நடிகர்கள் தானே ஆசிரியர்கள்!?

விபச்சாரத்தில் வழுக்கி விழ மனிதனை கூவி அழைக்கின்றது இந்த சினிமாக்கள்!
அரைகுறையாக காட்சி தரும் அழகு மங்கையர்களைக் கண்டு களிப்பதற்கென்றே
ஒரு சமூகம் அலைமோதுவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்!
இது தானே விபச்சார விபத்திற்கான முதல் எட்டு (படி)...!!

சமுதாய சீர் கேட்டிற்கு வித்திடும் இந்த சினிமாவைப் புறக்கணிப்போம்
பொண்ணான நேரத்தை மண்ணாக்காது
ஒவ்வொரு வினாடியையும் நல்ல விஷயங்களில் செலவு செய்வோம்

நச்சுப் பாம்புக்குப் பெயர் தான் நல்லபாம்பு
சினிமாக்கள் எவ்வளவு தான் நல்ல தோல் போர்த்தினாலும்
அது வடிகட்டிய அசிங்கம்... அசிங்கம்... அசிங்கம் தான்!

இந்த கேவலமான சினிமாக்களை புறக்கணித்து படிப்பு, வாசிப்பு போன்ற விஷயங்களில் கவணம் செலுத்துவதன் மூலம்
காலத்தை வீணாக்காது காலத்தின் கண்ணியத்தைப் பேணுவோமாக!

Apr 1, 2008

சுயபரிசோதனை!

எழுதியவர்: அபூ அரீஜ்

மரண ஓலம் உலகத்தை அப்பிக்கொண்டிருக்கிறது! எங்கு பார்த்தாலும் மனித இரத்தம் புவியை நனைத்துக் கொண்டிருக்கும் சிவப்புக் காட்சிகள்! குறிப்பாக முஸ்லிம்களின் விலைமதிக்க முடியாத உயிர், செல்லாக் காசுகளாகிவிட்ட கொடூர காலக்கட்டம்! எந்த நேரத்தில் நம் உயிர் பிரியும் என்பது யாருக்கும் தெரியாது! எங்கு தான் இந்த உயிர் பறிக்கப்படும் என்பதும் நமக்குத் தெரியாது!

எனவே அடிக்கடி நம்மை நாமே சுயபரிசோதனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும். கடந்த கால நம் வாழ்க்கையை கொஞ்சம் அசைபோட்டுப் பார்த்து நம் எதிர்காலத்தை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். கடந்த காலம் குறித்த பின்னோக்கும் தன்மையும்: எதிர்காலம் குறித்த திட்டமிடலும் கண்டிப்பாக ஒவ்வொரு மனிதனுக்கும் தேவை.

எல்லாவற்றிற்கும் மேலாக மறுமைக்காணதோர் பயணம் நம்மை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. அந்தப் பயணம் ஒரு சுவனப் பசுஞ்சோலையை நோக்கியதோர் பயணமாகவும் இருக்கலாம், அல்லது பாதாள படுகுழியின் பாசறையான நரகம் நோக்கியதோர் பயணமாகவும் இருக்கலாம் அல்லவா? நம்மை நாம் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

அன்பு நெஞ்சங்களே! மறுமையின் நந்தவனத்தில் 'நாமும் ஒரு மலராக’ வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

இதோ கீழ்காணும் எண்ண அலைகளை அமைதிப்படுத்த முயற்சிப்போமாக! எம்மைப் படைத்த வல்ல ரஹ்மானின் ஆதரவு என்றும் நம்மோடு இருக்கின்றது.

Ø தீமை தரும் பேச்சுக்களை விட்டும் என் நாவை எந்தளவு பாதுகாத்துக் கொள்கிறேன்? அல்லது வெட்டிப் பேச்சும், வீண் வம்பும் தான் என் கைதேர்ந்த கலையா?

Ø என்றாவது மையவாடியைத் தரிசித்து, நமக்கும் மரணம் வருமே! நாமும் இங்கு தானே கொண்டு வரப்படுவோம்! என்கின்ற எண்ணம் எப்போதாவது வந்துள்ளதா? அல்லது உலகம் மரணத்தையும் மறுமையையும் மறக்கடித்து விட்டதா?

Ø கப்ர் வாழ்க்கைக்கான கட்டுச் சாதனத்தை தயார் செய்து விட்டேனா? அல்லது கப்ர் வாழ்க்கையே இப்போது தான் நினைவுக்கு வருகின்றதா?

Ø பிறர் குறைகளைப் பாராது என் குறைகளை சீர் செய்வதில் எந்த அளவு ஆர்வம் காட்டியிருக்கிறேன்? அல்லது பிறர் குறைமேய்வது தான் என் தொழிலா?

Ø இறையச்சமுடையவனாகுவதற்கு எந்த அளவு முயற்ச்சித்திருக்கிறேன்? அல்லது என் மனது கல்லாகி விட்டதா?

Ø காலத்தை வீணடிக்காது அமானிதத்தைப் பாதுகாத்திருக்கிறேனா? அல்லது காலம் கூட அமானிதம் என்பது எனக்குத் தெரியாதா?

Ø அல்-குர்ஆனில் எத்தனை சூராக்களைப் பாடமாக்கியிருக்கிறேன்? எத்தனை ஹதீஸ்களை மனனமிட்டிருக்கிறேன்? இல்லை இல்லை பாட்டும் படமும் தான் என் சிந்தனையின் விருந்தா?

Ø நான் மற்றவர்களை சந்திக்கும் போதெல்லாம் சலாம் கூறுகின்றேனா? அல்லது சலாம் கூறுவது கூட எனக்கு கசப்பாக இருக்கிறதா?

Ø புன்சிரிப்போடும், நல்ல வார்த்தைகளோடும் மற்றவர்களைச் சந்திக்கிறேனா? அல்லது கர்வம் தான் என் நடைமுறைகளின் அலங்காரமா?

Ø என் எல்லாக்காரியங்களிலும் வலதை முற்படுத்துகின்றேனா?

Ø மறுமையில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் ஷபாஅத்தைப் பெற்றுக்கொள்வதற்காக, முஅத்தின் பாங்கு கூறும் போது நானும் அதே போன்று கூறுகின்றோனா? அல்லது வீணாக பேசிக் கொண்டிருக்கிறேனா?

Ø எந்த அளவு என் நாவை பேணுகிறேன்? குறிப்பாக புறம் பேசாமலிருக்கிறேனா?

Ø தீமையான விஷயங்களைக் கேட்பதை விட்டும் என் காதுகளையும், தீயவைகளைப் பார்ப்பதை விட்டும் என் கண்களையும் காத்துக்கொள்கிறேனா?

Ø நான் முஸலிமாக இருப்பதையொட்டி அல்லாஹ்வைப் புகழ்ந்தேனா? அல்லது நான் ஒரு நன்றி கெட்டவனா?

Ø எல்லா விஷயங்களிலும் அல்லாஹ்வின் மீது தவக்குல் வைக்கின்றேனா? அவனிடமே உதவியும் தேடுகின்றேனா?

Ø பிற முஸலிம்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்காக எப்போதாவது தனிமையில் பிரார்த்தனை செய்துள்ளேனா?

Ø பெருமையடிக்காமல் அல்லாஹ்வுக்கென்று என்னைத் தாழ்த்திக் கொண்டேனா?

Ø அல்லாஹ்வின் படைப்பினங்களைக் கூர்ந்து கவனித்து படிப்பினை பெற்றுள்ளேனா?

Ø எனக்கேற்படும் சோதனைகளிலிருந்து விடுபட அல்லாஹ்விடத்தில் முறையிட்டு கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேனா?

Ø எல்லா நேரத் தொழுகைகளையும் ஜமாஅத்தோடு தொழுகின்றேனா? எத்தனை முறை முன்வரிசையில் நிற்பதற்கு கவணம் செலுத்தியிருக்கிறேன்?

Ø அல்-குர்ஆனை நிதானமாக எத்தனை முறை ஓதியிருக்கிறேன்? அதன் மொழி பெயர்ப்பை படித்து விளங்க முயற்சி செய்தேனா?

Ø சுன்னத்தான தொழுகைகளைத் தொழுகின்றேனா? குறிப்பாக முன்பின் சுன்னத்துகள், வித்ர், ளுஹா போன்ற தொழுகைகளோடு எந்தளவு என் தொடர்பு இருக்கின்றது?

Ø காலை-மாலை திக்ர்களைப் பேணி ஓதுகின்றேனா?

Ø எல்லா அமல்களையும் இஹ்லாஸோடு செய்கின்றேனா? அல்லது உலக இலாபம் தான் என் நோக்கமா?

Ø நயவஞ்சகத்திலிருந்து பாதுகாப்பு பெறும் பொருட்டு நான் மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்றேனா?

Ø என் பெற்றோர்களோடு நல்ல முறையில் நடக்கின்றேனா? உறவினர்களோடு சேர்ந்து வாழ்கின்றேனா?

Ø ஏழை எளியவர்களுக்கு தான தர்மம் செய்கின்றேனா?

Ø எவனாவது நோய் வாய்பட்டிருக்கும் நிலையில் நோய் விசாரிக்கச் சென்று நோய் நிவாரணத்திற்காக அந்நோயாளிக்கு பிரார்த்தனை செய்தேனா?

Ø முஸ்லிம்கள் தாக்கப்படுகின்ற போதெல்லாம் அவர்களின் விடுதலைக்காக ஒரு சொட்டு கண்ணீராவது சிந்தியிருக்கிறேனா?

Ø ஒவ்வொரு நாளும் தூங்கும் முன் என்னை நானே சுய பரிசோதனை செய்கின்றேனா?

சகோதர சகோதரிகளே! கொஞ்சம் நில்லுங்கள்!

இக்கேள்விகளை அடிக்கடி உங்கள் மனதில் ஓட விடுங்கள்! ஒவ்வொரு கேள்விக்கும் விடை காண முழு முயற்சி எடுங்கள்!

நம் அமல்களை ஏற்றுக்கொள்ள வல்லோனே போதுமானவன்.

யார் மாவீரன்?

உரை: அபூ அரீஜ்

Audio / Video Link : யார் மாவீரன்?